search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vegetables"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காய்கறிகளை முழுவதுமாக வேக வைப்பதால் அதில் உள்ள வைட்டமின்கள் நமக்கு முழுவதும் கிடைப்பதில்லை.
    • கேன்சர் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    நாம் அன்றாட வாழ்வில் இப்போது இருக்கும் வேலை பளுவால் ஈஸியா என்ன சாப்பிடலாம் என்ற எண்ணத்தில் ஹோட்டலில் சென்று சாப்பிட தொடங்கிவிட்டோம். ஆனால் அப்படி அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவதால் நமக்கு சுவை என்னமோ நல்லாதான் இருக்கும்.. ஆனால் உடலுக்கு அத்தனையும் கேடு விளைவிப்பதாக இருக்கிறது.

    இதனால் இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், உப்பு சார்ந்த நோய்கள் இப்போ அதிகபடியாக பெருகி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமன், இதயம் சார்ந்த நோய்கள், கேன்சர் என பல்வேறு விதமாக உடல் சார்ந்த நோய்களுக்கு ஆளாகுகிறார்கள்.

    சரி ஹோட்டல்ல சாப்பிட்டா தான் இப்படி ஏகப்பட்ட நோய்கள் வருது.. அதையே நாம் வீட்டில் செய்து சாப்பிடுவோம் என்று கிளம்பினாலும் இப்படிதான் ஆகிறது.


    ஆமாம்... நாம் எந்த அளவுக்கு எண்ணெய், உப்பு, சர்க்கரை என அதிக சுவையூட்டும் உணவுகளை எடுத்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு நாம் நோய்களுடன் வாழ்கிறோம் என்று தான் அர்த்தம்.

    இப்போதெல்லாம் சிறு வயதிலேயே டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு பிசிஓஎஸ், பிசிஓடி பிரச்சனைகள் வர ஆரம்பித்துவிடுகிறது. இதை ஐசிஎம்ஆர், என்ஐஎன் ஆகிய சுகாதார அமைப்புகள் உணவின் வழிகாட்டி என்ற கருத்துகணிப்பின் மூலம் நிரூபித்துள்ளனர்.

    நாம் அன்றாடம் வேக வைத்த காய்கறிகள், பழங்கள், முளைக்கட்டிய பயறு வகைகள் நாம் எடுத்து கொள்வதால் உடல் சார்ந்த நோய்களில் இருந்து விலகி இருக்கலாம்.


    நான் ஸ்டிக் பாத்திரங்கள் அடி பிடிக்காது, விரைவில் சமைக்கக் கூடியது, குறைந்த எண்ணெய் போதுமானது, கழுவவும் வசதியானது என பல வகையான காரணங்களுக்காகவே இதை பயன்படுத்துகின்றனர். ஆனால் நான் ஸ்டிக் பாத்திரங்களில் இருக்கும் வழவழப்புத் தன்மைக்காக polytetrafluoroethylene (PTFE) என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. உடலுக்கு அதிக பாதிப்புக்களை தருகிறது. கேன்சர் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    இன்றைய நவீன நான் ஸ்டிக் பாத்திரங்கள் ஆபத்து இல்லாதவை என்று கூறப்படுகிறது. ஆனால் அதை பயன்படுத்தும் முறையைப் பொருத்தே உள்ளது.

    இது போன்ற உணவு பழக்கங்களில் இருந்து நாம் எப்படி மாறுவது என்றால், நம் முன்னோர்கள் பயன்படுத்திய மண்சட்டி சமையல் முறையில் சமைத்து சாப்பிடலாம். அதுமட்டுமல்ல, காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதால் அதில் உள்ள சத்துக்கள் நேரடியாக நமது உடலுக்கு கிடைக்கிறது.


    காய்கறிகளை முழுவதுமாக வேக வைப்பதால் அதில் உள்ள வைட்டமின்கள் நமக்கு முழுவதும் கிடைப்பதில்லை. ஆதலால் அரைபதம் வேகவைத்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

    நமக்கு வரும் நோய்களுக்கு நாம் தான் காரணமாக இருக்கிறோம். நமது சந்ததியும் இதையே பின்பற்றுவதால் அவர்களுக்கும் சிறு வயதிலேயே பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறன. ஆகவே நமது அடுத்த தலைமுறையை காப்பாற்றுவது தமது கையில் தான் உள்ளது. நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மகத்துவத்தை அவர்களுக்கு விளக்கமாக எடுத்து கூற நாம் கடமைபட்டிருக்கிறோம்.

    • சமையலுக்கு பீன்ஸ் வாங்குவதை இல்லத்தரசிகள் குறைத்து உள்ளனர்.
    • ஒரு கிலோ பீன்ஸ் ரூ200-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று 450 லாரிகளில் காய்கறி விற்பனைக்கு வந்தது.

    வரத்து குறைவால் பீன்ஸ், அவரைக்காய் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.

    மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ200-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் பீன்ஸ் ரூ.250 வரை விற்கப்படுகிறது. இதனால் சமையலுக்கு பீன்ஸ் வாங்குவதை இல்லத்தரசிகள் குறைத்து உள்ளனர்.

    அதேபோல் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக விளைச்சல் பாதிப்பால் கத்தரிக்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய், சவ்சவ் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை காட்டிலும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்து உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை விபரம் வருமாறு (கிலோவில்) :-

    உஜாலா கத்தரிக்காய்-ரூ.50, வரி கத்தரிக்காய்-ரூ.35, வெண்டைக்காய்-ரூ.35, பீன்ஸ்-ரூ.200, அவரைக்காய்-ரூ.100, ஊட்டி கேரட்-ரூ.45, பீட்ரூட்-ரூ.25, முள்ளங்கி-ரூ.30, நூக்கல்-ரூ.30, சவ்சவ்-ரூ.50, சுரக்காய்-ரூ.15, வெள்ளரிக்காய்-ரூ.25, முருங்கைக்காய்-ரூ.60, கோவக்காய்-ரூ.20, பாகற்காய்-ரூ.40, நைஸ் கொத்தவரங்காய்-ரூ.50, மாங்காய்-ரூ.25, பீர்க்கங்காய்-ரூ.50, புடலங்காய்-ரூ.50, தக்காளி-ரூ.22, நாசிக் வெங்காயம்-ரூ.26, சின்ன வெங்காயம்-ரூ.60, உருளைக்கிழங்கு-ரூ.26, பச்சை மிளகாய்-ரூ.60, இஞ்சி-ரூ.135.

    • தற்போது தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் ஆங்காங்கே சாலையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.
    • ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் விலை சரிவை சந்திப்பதும் விவசாயிகள் நஷ்டமடைவதும் தொடர்கதையாகவே உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் அடிக்கடி ஏற்படும் விலை சரிவு விவசாயிகளின் வாழ்க்கையை அதல பாதாளத்துக்கு தள்ளி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் ஆங்காங்கே சாலையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் சாகுபடி செய்யப்படும் தக்காளி உடுமலை தினசரி சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து வியாபாரிகள் மூலம் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கேரள மாநிலத்தின் சில பகுதிகளுக்கும் இங்கிருந்து தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது. வரத்து மற்றும் தேவையை பொறுத்து தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் விலை சரிவை சந்திப்பதும் விவசாயிகள் நஷ்டமடைவதும் தொடர்கதையாகவே உள்ளது. தற்போது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.80 முதல் ரூ.150 வரையே விற்பனையாகிறது. இதனால் போக்குவரத்து, சுங்கம், கூலி என செலவு செய்து சந்தைக்கு கொண்டு வந்து நஷ்டத்துடன் திரும்புவதை விட சாலை ஓரத்தில் வீசி எறிவதே சிறந்தது என்று விவசாயிகள் முடிவு செய்து விடுகின்றனர்.

    பல விவசாயிகள் விரக்தியின் உச்சத்தில், டிராக்டர்கள் மூலம் தக்காளி செடிகளை அழிக்க தொடங்கியுள்ளனர். ஆண்டுதோறும் ஏற்படும் இந்த நிலையால் தக்காளி செடிகள் மட்டும் அழிக்கப்படுவதில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரமும், எதிர்காலமும் சேர்ந்தே அழிந்து போகிறது. இந்தநிலை ஏற்படாமல் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயம் மட்டுமல்லாமல் விவசாயியும் சேர்ந்தே அழியும் நிலை உருவாகி விடும்.

    எல்லா பொருட்களின் விலைவாசியும் 10 ஆண்டுகளுக்குள் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது.ஆனால் ஒரு கட்டு கீரை ரூ.10 லிருந்து ரூ.15 ஆக உயர்த்தப்பட்டால் அது அநியாய விலையாக பார்க்கப்படுகிறது. உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்கப்பட வேண்டும். ஆனால் ரூ.5-க்கும் ரூ.10-க்கும் அள்ளி கொடுத்து விட்டு விவசாயி மூலையில் முடங்கி கிடக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மடத்துக்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தக்காளியை கொட்டி உள்ளனர்.

    எனவே விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலையில் தக்காளி சந்தை உருவாக்கி, இருப்பு வைக்கவும், உரிய விலை கிடைக்கும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவும், மதிப்புக் கூட்டுப்பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் கை வினைஞர்களுக்கு ரூ.7.01 கோடி கடனும் வழங்கப்பட்டுள்ளது.
    • அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கூட்டுறவுத்துறையின் மூலம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி, நடப்பாண்டில் 31.01.2024 வரை 15,87,522 விவசாயிகளுக்கு பயிர்கடனாக ரூ.13,364.75 கோடி வழங்கப்பட்டுள்ளது. 73,599 பயனாளிகளுக்கு சிறுவணிகக் கடனாக ரூ.277.21 கோடி, 4,978 கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரூ.19.69 கோடி கடனும், 1,681 நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் கை வினைஞர்களுக்கு ரூ.7.01 கோடி கடனும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், கூட்டுறவு மருந்தகங்கள் வாயிலாக ரூ.121.47 கோடி அளவிற்கு மருந்துகளும், கூட்டுறவு மொத்த, பிரதம பண்டக சாலைகள் மூலம் ரூ. 1019 கோடி அளவிற்கு பொருட்களும், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் வாயிலாக ரூ.2084.49 கோடி புரள் வணிகமும், பண்ணை பசுமை கடைகள் வாயிலாக 6236 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.28.53 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைச்செயலாளர் டாக்டர் கோபால், பதிவாளர் டாக்டர் சுப்பையன், சிறப்புப் பணி அலுவலர் சிவன்அருள் உட்பட கூடுதல் பதிவாளர்கள், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சாலையோர வியாபாரிகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மறியல் போராட்டத்தின் காரணமாக பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம் பாளையத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தென்னம் பாளையம் பகுதியில் சாலையோரம் வியாபாரிகள் பலர் கடைகள் அமைத்து காய்கறிகள் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு விற்பனை பாதிக்கப்பட்டு வருவதாகவும் , இதனால் சந்தை பகுதிகளில் வியாபாரிகள் ரோட்டோரம் காய்கறி கடைகளை அமைக்க கூடாது என விவசாயிகள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

    மேலும் கடந்த ஒரு வார காலமாக விவசாயிகள் உழவர் சந்தைக்கு செல்லாமல் சாலையோர வியாபாரிகளுக்கு போட்டியாக திருப்பூர் பல்லடம் சாலையிலேயே கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது .

    பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இன்று காலை திருப்பூர் பல்லடம் சாலை தென்னம் பாளையத்தில் சாலையோர வியாபாரிகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தின் காரணமாக பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கூடாது எனவும் மாநகராட்சி நிர்வாகம் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்லடம் சாலை டி.கே.டி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோர வியாபாரிகளும் போட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

    • அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
    • 2 நாட்களை கடந்தும் லாரிகளில் இருந்து பல்லாரி இறக்கப்படாமல் இருப்பதால் அவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தையாக விளங்கி வரும் பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.35 முதல் 40 வரை ஒரு கிலோ பல்லாரி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் ரூ.25, ரூ.20 என படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு மராட்டிய மாநிலத்தில் இருந்து அதிகளவில் பல்லாரி கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மராட்டிய மாநிலத்தில் பல்லாரி விளைச்சல் அதிகரிப்பால் அதிகளவில் லாரிகள் மூலம் தென் மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

    இதனால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் பல்லாரி விலை ரூ.10 முதல் ரூ.15 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் போதிய விற்பனை நடை பெறாததாலும் பாவூர்சத்திரம் மார்க்கெட் பகுதி மற்றும் நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை ஓரங்களில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் லோடுகள் இறக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    2 நாட்களை கடந்தும் லாரிகளில் இருந்து பல்லாரி இறக்கப்படாமல் இருப்பதால் அவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    • மூளையை அழற்சி பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.
    • ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

    வானவில்லில் ஒளிரும் ஏழு வண்ணங்களை போலவே நிறத்தோற்றம் கொண்ட காய்கறிகள், பழங்களை உண்ணும் வழக்கத்தை பின்பற்றுவது `ரெயின்போ டயட்' எனப்படுகிறது. வெவ்வேறு நிறம் கொண்ட தாவரங்கள், மரங்களில் விளையும் பொருட்கள் வெவ்வேறு வைட்டமின்கள், அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியவை.

    சிவப்பு நிற உணவுகள்:

    தக்காளி, தர்பூசணி, கிரேப் புரூட், கொய்யா, கிரான்பெர்ரி, ஆப்பிள், டிராகன் பழம் போன்றவை.

    ஆரோக்கிய நன்மைகள்:

    பக்கவாதம், மார்பக புற்றுநோய் போன்ற சில வகை புற்றுநோய்களின் அபாயத்தை குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க துணை புரிகின்றன.

    மஞ்சள்-ஆரஞ்சு உணவுகள்:

    கேரட், மாம்பழம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பூசணி, பப்பாளி, ஆப்ரிகாட், வாழைப்பழம் போன்றவை.

    ஆரோக்கிய நன்மைகள்:

    வீக்கத்தைக் குறைக்கவும், பார்வைத்திறனை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாகவும், சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கவும் உதவுகின்றன.

    நீலம்-ஊதா-இண்டிகோ உணவுகள்:

    நீல நிற பெர்ரி பழம், கத்திரிக்காய், கருப்பு நிற பெர்ரி, பிளம்ஸ் போன்றவை.

    ஆரோக்கிய நன்மைகள்:

    போலேட், வைட்டமின் பி நிறைந்த இந்த உணவுகள் விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதை எதிர்த்து போராட உதவுகின்றன. ஞாபகத் திறனை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் வழிவகுக்கின்றன. இதய நோய்கள் மற்றும் மூட்டுவலி அபாயத்தையும் குறைக்கின்றன.

    பச்சை உணவுகள்:

    பீன்ஸ், கொண்டைக்கடலை, பருப்பு, புரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்றவை.

    ஆரோக்கிய நன்மைகள்:

    இவைகளில் போலிக் அமிலம், வைட்டமின் கே மற்றும் ஒமேகா-3 போன்றவை நிறைந்துள்ளன. உடலில் கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், எலும்புகளை வலுவாக வைத்திருக்கவும் உதவிபுரிகின்றன.

    இந்த உணவு ஆரோக்கியமானதா?

    ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, `ரெயின்போ டயட்' எனப்படும் வானவில் வண்ண உணவுகள் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், நினைவாற்றல் இழப்பைத் தடுக்கவும் உதவுகின்றன. அத்துடன் பிளாவனாய்டுகள் நிறைந்த வண்ணமயமான உணவுகள் மூளையை அழற்சி பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் செய்யும்.

    • உணவு விரைவாக செரிமானமாக வேண்டும்.
    • உணவின் வகையை பொறுத்து செரிமான முறை அமையும்.
    உண்ணும் உணவு விரைவாக செரிமானமாக வேண்டும். அப்போதுதான் குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். வயது, பாலினம், வளர்சிதை மாற்றம், உணவின் வகை உள்ளிட்டவற்றை பொறுத்து செரிமான செயல்முறை அமையும். இருப்பினும் சாப்பிடும் உணவை பொறுத்து செரிமான செயல்முறை 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை நடைபெறலாம் என்பது உணவியலாளர்களின் கருத்தாக

    இருக்கிறது. எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரத்தில் செரிமானமாகும் என்பது பற்றி பார்ப்போம்.

     தண்ணீர்

    தண்ணீர் விரைவாக செரிமானம் ஆகக்கூடியது. இருப்பினும் வயிறு நிரம்பியுள்ளதை பொறுத்து அது ஜீரணமாகும் நேரம் மாறுபடும். வெறும் வயிற்றில் தண்ணீர் பருகினால் ஐந்து நிமிடங்களுக்குள் அது உறிஞ்சப்பட்டுவிடும். ஆனால் அதிக அளவு உணவு சாப்பிட்டு விட்டு அதன் பிறகு தண்ணீர் பருகினால் அது உறிஞ்சப்படுவதற்கு சில மணி நேரமாகிவிடும்.

     ஜூஸ்

    பழச்சாறு பருகினால் அது சுமார் 20 நிமிடங்களில் ஜீரணமாகிவிடும். அதில் இருக்கும் சத்துக்கள் விரைவாக உறிஞ்சப்பட்டு உடல் உறுப்புகளை சென்றடைந்துவிடும். அதன் மூலம் ஆரோக்கியம் வலுப்படும். ஸ்மூத்திகளை பருகினால் அவை செரிமானம் ஆவதற்கு சுமார் 30 நிமிடங்கள் தேவைப்படும். எந்த உணவுகளை உட்கொண்டாலும் அதனுடன் இது போன்ற நார்ச்சத்துமிக்க உணவுகளையும் அடிக்கடி சாப்பிட வேண்டும். அவைதான் செரிமான மண்டலத்திற்கு சிறந்தவை.

     பழங்கள்

    முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை மற்றும் வாழைப்பழங்கள் சுமார் 30 நிமிடங்களில் செரிமானமாகிவிடும். ஆப்பிள், பேரிக்காய், கிவி, செர்ரி போன்றவை ஜீரணமாக சுமார் 40 நிமிடங்கள் செலவாகும். தர்பூசணி பழம் விரைவாக செரிமானமாகக்கூடியது. அதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் 20 நிமிடங்களுக்குள்ளாகவே செரிமான செயல்முறை ஒட்டுமொத்தமாக நடைபெற்று முடிந்துவிடும். குடல் இயக்கம் சுமூகமாக நடைபெறுவதற்கும் உதவி புரியும். அதேவேளையில் செரிமான பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு உணவுகளுடன் பழங்களை சேர்த்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

     காய்கறிகள்

    பழங்களை விட காய்கறிகள் ஜீரணிக்க சற்று கூடுதல் நேரம் தேவைப்படும். இருப்பினும் கீரை, வெள்ளரிக்காய், குடை மிளகாய், தக்காளி உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகள் செரிமானமாகி வயிற்றை விட்டு வெளியேற சுமார் 30 நிமிடங்கள் ஆகலாம். முட்டைக்கோஸ், காலிபிளவர், புரோக்கோலி உள்ளிட்ட காய்கறிகள் 40 நிமிடங்களில் செரிக்கப்படும். கேரட், பீட்ரூட் உள்ளிட்ட வேர் காய்கறிகள் செரிமானமாக சுமார் 50 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சோளம் போன்றவை செரிமானமாக சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

     தானியங்கள்

    பழுப்பு அரிசி, ஓட்ஸ் போன்ற தானியங்கள் செரிமானமாகி வயிற்றில் இருந்து வெளியேற சுமார் ஒன்றை மணி நேரம் ஆகலாம். அதுபோல் பருப்பு வகைகள், பீன்ஸ் போன்றவை செரிமானமாவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும்.

     இறைச்சி

    எண்ணெய் இல்லாத மீன் வகைகள், கடல் உணவுகளை சாப்பிட்டால் அவை 30 நிமிடங்களுக்குள் செரிமானமாகிவிடும். அதே நேரத்தில் சால்மன், மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் செரிமானம் அடைவதற்கு 50 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். ஆடு, கோழி, மாடு, பன்றி போன்றவைகளின் இறைச்சிகளை உட்கொண்டால் அவை ஜீரணமாவதற்கு 4 முதல் 6 மணி நேரமாகும். சில சமயங்களில் முழுமையாக செரிமானம் ஆவதற்கு 24 மணி நேரத்திற்கும் மேலாகும்.

     பால் பொருட்கள்

    கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டிகள் ஜீரணிக்க சுமார் 2 மணி நேரமாகும். கெட்டியான பாலாடைக்கட்டிகள் ஜீரணமாக5 மணி நேரம் கூட ஆகலாம். முட்டையின் மஞ்சள் கரு மட்டும் ஜீரணமாகுவதற்கு 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். முழு முட்டையும் செரிமானமாவதற்கு சுமார் 45 நிமிடங்களாகும்.

     நட்ஸ்கள்-விதைகள்

    எள், சூரியகாந்தி, பூசணி விதைகள் ஜீரணமாக சுமார் 2 மணி நேரம் தேவைப்படும். பச்சை வேர்க்கடலை, பாதாம், முந்திரி பருப்புகள், அக்ரூட் பருப்புகள் போன்றவை ஜீரணமாகுவதற்கு சுமார் 3 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

    • தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வரும் நிலையில் நேற்று 20 லாரிகளே வந்துள்ளன.
    • வரத்து குறைவு மற்றும் திருமண சீசன் காலம் ஆகியவற்றால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாதிப்பு அண்டை மாநிலமான கேரளாவிலும் எதிரொலித்துள்ளது. அங்கு அத்தியாவசிய தேவை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதில் குறிப்பாக காய்கறிகள் கடும் ஏற்றத்தை சந்தித்துள்ளது. தமிழகத்தில் இருந்து காய்கறிகள் கேரளாவுக்கு செல்வது குறைந்துள்ளதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழகத்தில் இருந்து செல்லும் முருங்கைக்காய் வரத்து குறைவு காரணமாக கேரளாவில் ஒரு கிலோ ரூ.170-க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் இதன் விலை ரூ.90 ஆக இருந்தது.

    பச்சை மிளகாய் விலையும் உயர்வை சந்தித்துள்ளது. கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.80 ஆக உயர்ந்து உள்ளது. அதே நேரம் இஞ்சியின் விலை ரூ.240-ல் இருந்து கிலோ ரூ.140 ஆக குறைந்துள்ளது. வயநாட்டில் இருந்து இஞ்சியின் வரத்து அதிகமாக உள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளது.

    ஆலப்புழா மார்க்கெட்டுகளுக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வரும் நிலையில் நேற்று 20 லாரிகளே வந்துள்ளன. வரத்து குறைவு மற்றும் திருமண சீசன் காலம் ஆகியவற்றால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தொடர்ந்து மழை பெய்ததால் அதிகாலை முதல் மார்க்கெட் வளாகம் முழுவதும் வியாபாரிகள் இல்லாமல் வெறிச் சோடி காணப்பட்டது.
    • குறிப்பாக பீன்ஸ், கேரட், கத்திரிக்காய், முட்டை கோஸ் அதிக அளவில் தேங்கியதால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

    போரூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு, விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வருகை பாதியாக குறைந்தது. நள்ளிரவில் விறு விறுப்பாக தொடங்கிய காய்கறி விற்பனை பின்னர் மந்தமாகி போனது. தொடர்ந்து மழை பெய்ததால் அதிகாலை முதல் மார்க்கெட் வளாகம் முழுவதும் வியாபாரிகள் இல்லாமல் வெறிச் சோடி காணப்பட்டது.

    இதன்காரணமாக மார்க்கெட்டில் காய்கறிகள் விற்ப னை பாதியாக குறைந்தது. மூட்டை, மூட்டையாக காய்கறிகள் விற்பனை ஆகாமல் தேங்கியது. குறிப்பாக பீன்ஸ், கேரட், கத்திரிக்காய், முட்டை கோஸ் அதிக அளவில் தேங்கியதால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

    வியாபாரிகள் வருகை குறைந்ததால் கத்தரிக்காய், பீன்ஸ், ஊட்டி கேரட், முட்டை கோஸ், கோவக்காய் ஆகிய பச்சை காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தன. மொத்த விற்பனையில் உஜாலா கத்தரிக்காய் ஒரு மூட்டை (80கிலோ) ரூ.500-க்கும், ஊட்டி கேரட் ஒரு மூட்டை (80கிலோ) ரூ.600-க்கும், கோவக்காய் ஒரு மூட்டை (55கிலோ) ரூ.400-க்கும், மூட்டை கோஸ் ஒரு மூட்டை (50கிலோ) ரூ.350-க்கும் விற்கப்பட்டது. அதனையும் வாங்கிச்செல்ல வியாபாரிகள் வரவில்லை. ஆனாலும் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கும், பெரிய வெங்காயம் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.58வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.130-க்கும், பெரியவெங்காயம் ரூ.70-க்கும் விற்பனை ஆகி வருகிறது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கோயம்பேடு சந்தைக்கு இன்று காலை 450க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன. ஆனால் அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால் வியாபாரி கள் வருகை குறைந்தது. வழக்கமாக நடைபெறும் விற்பனையில் 50 சதவீத காய்கறிகள் மட்டுமே விற்று உள்ளது. ஏராளமான காய்கறிகள் மூட்டை, மூட்டையாக தேங்கி கிடக்கிறது. இதனால் கடந்த சிலநாட்களாக உச்சத் தில் இருந்த பீன்ஸ் விலை குறைந்து உள்ளது என்றார்.

    கோயம்பேடு மார்க்கெட் டில் இன்றைய காய்கறி மொத்த விற்பனை விலை விபரம் (கிலோவில்) வருமாறு:-

    உஜாலா கத்தரிக்காய்-ரூ.8, பீன்ஸ்-ரூ.40, அவரைக் காய்-ரூ.45, வெண்டைக்காய்-ரூ.25, வெள்ளரிக்காய்-ரூ.15, பன்னீர் பாகற்காய்-ரூ.30, கோவக்காய்-ரூ.7, ஊட்டி கேரட்-ரூ.15, சுரக்காய்-10, பீட்ரூட்-ரூ.20, முட்டை கோஸ்-ரூ.8, முருங்கைக் காய்-ரூ.80 முள்ளங்கி-ரூ.20, ஊட்டி சவ்சவ்-ரூ.12, நூக்கல் -ரூ.25, புடலங்காய்-ரூ.10, பீர்க்கங்காய்-ரூ.30, குடை மிளகாய்-ரூ.30, இஞ்சி-ரூ.95, பச்சை மிளகாய்-ரூ.40, தக்காளி-ரூ.22, உருளைக் கிழங்கு-ரூ.18.

    • கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.
    • இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது இல்லத்தரசி களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    தென்தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தையாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் விளங்குகிறது. சுற்று வட்டார பகுதிகளான காவேரியம்மாபட்டி, அரசப்பபிள்ளைபட்டி, கொசவபட்டி, அம்பி ளிக்கை, கள்ளிமந்தையம், கேதையரும்பு, இடைய கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 500 ஏக்கருக்கு அதிகமான நிலப்பரப்பில் காய்கறி சாகுபடி நடைபெற்று வருகிறது.

    இங்கிருந்து ஒட்டன்ச த்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் காய்கறிகள் வெளி மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது இல்லத்தரசி களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆயுதபூஜை, பொங்கல் மற்றும் பூஜை நாட்களில் அர்ஜூனா பூசணிக்காய் அதிக அளவில் விற்பனை செய்யப்படும். இங்கிருந்து மகாராஸ்டிரா, மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது வெளி மாநில வியாபாரிகள் வராததால் பூசணிக்காய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

    வழக்கமாக 1 கிலோ ரூ.18 முதல் ரூ.20 வரை விலை கேட்கப்படும். ஆனால் தற்போது ரூ.7க்கு மட்டுமே விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதுதவிர மற்ற காய்கறிகளின் வலை கனிசமாக உயர்ந்துள்ளது.

    கடந்த மாதம் ரூ.25க்கு விற்பனையான சின்ன வெங்காயம் 1 கிலோ ரூ.80க்கு விற்கப்பட்டது. ரூ.15க்கு விற்கப்பட்ட பல்லாரி ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. கரும்பு முருங்கை ரூ.70, மர முருங்கை ரூ.45, செடி முருங்கை ரூ.60, வெண்டை க்காய் ரூ.30, புடலங்காய் ரூ.30, பாகற்காய் ரூ.25, கல்லாமை மாங்காய் ரூ.65, உருட்டு மாங்காய் ரூ.45, உருளைக்கிழங்கு ரூ.40, சேனைக்கிழங்கு ரூ.55, பீன்ஸ் ரூ.45 என்ற விலையில் விற்பனையானது.

    20 கிலோ பை பச்சை கத்தரிக்காய் ரூ.400, வெள்ளை கத்தரிக்காய் ரூ.500, கலர் கத்தரிக்காய் ரூ.550, 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையானது. இனிவரும் காலங்களில் காய்கறிகளின் விலை மேலும் உயரும் என வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துகாட்டாள விளங்குகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    பெரிய கோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கமும் என தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெருவுடையாருக்கு ஐப்பசி மாத பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறும்.

    அதன்படி இன்று ஐப்பசி மாத பவுர்ணமி என்பதால் பிற்பகலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் வழங்கிய 1500 கிலோ அரிசி சாதமாக தயார் செய்யப்பட்டன. பின்னர் தயார் செய்யப்பட்ட சாதம் பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டன.

    இதையடுத்து 500 கிலோ காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இரவில் லிங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட அன்னம் பக்தர்கள், கால்நடைகளுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    இரவு 7 மணி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இரவு சந்திரகிரகணம் என்பதால் 8 மணிக்கே நடை சாத்தப்பட உள்ளது.

    ×