search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajini"

    • 'வேட்டையன்' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது.
    • இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    'ஜெயிலர்' படத்திற்கு பிறகு ஞானவேல் இயக்கிவரும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்தார். அவரது 170-வது படமான இதில் நடிகர்கள் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

    'வேட்டையன்' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் வேட்டையன் படப்பிடிப்பில் ரஜினிகாந்திற்கான காட்சிகள் முழுவதும் முடிவடைந்தது என படக்குழுவினர் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.

    இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' படத்தில் நடிக்க உள்ளார். அதன் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபி செல்லும் விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். ஒருவாரம் அபுதாபியில் தங்கி இருந்து ஓய்வு எடுக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்தை கண்டதும் ரசிகர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சண்டைக் காட்சியில் பயன்படுத்துவதற்காக ஹெலிகாப்டர்கள் புதுச்சேரியில் சுற்றி வருகின்றன
    • இதில் கேரவேனில் ரஜினி வேட்டி சட்டையுடன் இறங்கி வரும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    சூப்பர் ஸ்டார் ரஜினியின் 170-வது படம் 'வேட்டையன்' . இப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

    இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். நெல்லை, குமரி, தூத்துக்குடி, சென்னை, ஆந்திரம், மும்பை பகுதிகளில் இதன் படப்பிடிப்புகள் நடந்து முடிந்தது.




    இந்நிலையில் இப்படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது புதுச்சேரியில் படத்தின் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகின்றன.

    புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் 7 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் ரஜினி வெளிநாட்டவருடன் சண்டையிடுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.




    சண்டைக் காட்சியில் பயன்படுத்துவதற்காக ஹெலிகாப்டர்கள் புதுச்சேரியில் சுற்றி வருகின்றன. இதில் கேரவேனில் இருந்து ரஜினி வேட்டி சட்டையுடன் இறங்கி வரும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

    இந்நிலையில் ரஜினியின் 'வேட்டையன்' படம் வருகிற அக்டோபர் மாதம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்ய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'வேட்டையன்' படம் வழக்கமான ரஜினி படமாக இருக்காது.
    • ரஜினி இது போன்ற கதையை தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி

    சூப்பர் ஸ்டார் ரஜினியின் 170-வது படம் 'வேட்டையன்' . இப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

    இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். நெல்லை, குமரி, தூத்துக்குடி, சென்னை, ஆந்திரம் பகுதிகளில் இதன் படப்பிடிப்புகள் நடந்து முடிந்தது. தற்போது மும்பையில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.இதில் அமிதாப்பச்சன் சம்பந்தபட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த படம் பற்றி நடிகர் ராணா கூறியதாவது:-




    ' ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அது நடக்கும் என்று நினைக்கவில்லை. 'வேட்டையன்' படம் வழக்கமான ரஜினி படமாக இருக்காது.

    இப்படம் வித்தியாசமாக அமைந்துள்ள படம். ரஜினி இது போன்ற கதையை தேர்ந்தெடுத்ததில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படம் கோர்ட்டு , போலீஸ் தொழில்துறை அமைப்புகளை பற்றிய பல்வேறு கருத்துக்கள் மற்றும் விஷயங்கள் நிறைந்த படமாக அமைந்து உள்ளது "என்றார் .

    இந்நிலையில், இப்படம் வருகிற அக்டோபர் மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி.

    ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.

    விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பையில் சில தினங்களாக நடைபெற்றது. அங்கு ரஜினி மற்றும் அமிதாப் பச்சனின் புகைப்படங்கள் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

    இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜூனில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வர்வேரபை பெற்றது.

    மேலும் இளையராஜா இசையில் ரஜினிகாந்த நடித்த தங்கமகன் படத்தில் இடம்பெற்றிருந்த 'வா வா பக்கம் வா...' பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டு டிஸ்கோ டிஸ்கோ என பாடல் இடம்பெற்றுள்ளது.

    இதையடுத்து கூலி படத்தில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இது கோலிவுட்டில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ரஜினி தற்போது பதிலளித்துள்ளார். வேட்டையன் பட படப்பிடிப்பிற்காக மும்பை சென்ற அவர், படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பினார்.

    அப்போது விமான நிலையத்தில் அவரிடம் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "அது இளையராஜாவிற்கும் தயாரிப்பாளருக்கும் உண்டானது" என்றார். மேலும், கூலி பட டைட்டில் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது ரொம்ப மகிழ்ச்சி என்றும் வேட்டையன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தற்போது படத்தின் சூட்டிங் மும்பையில் நடைப்பெற்று வருகிறது. நேற்று அமிதாப் பச்சனுடன் ரஜினிகாந்த் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியது.
    • 33 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சன் ரஜினிகாந்துடன் இணைந்து படத்தில் நடிகவுள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சுவாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங், பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் வேட்டையன் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்படத்தை டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். தற்போது படத்தின் சூட்டிங் மும்பையில் நடைப்பெற்று வருகிறது. நேற்று அமிதாப் பச்சனுடன் ரஜினிகாந்த் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியது.

    33 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சன் ரஜினிகாந்துடன் இணைந்து படத்தில் நடிகவுள்ளார். அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தை தொடர்ந்து டிஜே ஞானவேல் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் படம் இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

     

    முன்னதாக வேட்டையன் படத்தில் வரும் ராணா கதாப்பாத்திரத்திற்கு நானியை அணுகியுள்ளார் கால்ஷீட் பிரச்சனைகளால் அவரால் வேட்டையன் படத்தில்  நடிக்க முடியவில்லை. அப்போது அவர் நானிக்கு ஒரு கதையை கூறியதாகவும் அது அவரை மிகப் பெரிய அளவில் கவர்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 33 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சனும் ரஜினிகாந்தும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
    • லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' புதிய படத்தை டைரக்டர் ஞானவேல்ராஜா இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

    லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நேற்று வேட்டையன் படப்பிடிபிற்காக ரஜினி மும்பை சென்றார். அவர் விமான நிலையத்திற்கு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்கலில் வைரலாகியது. படத்தின் இன்ட்ரோ பாடலில் அனிருத் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியது. படத்தின் இண்ட்ரோ பாடலில் ரஜினிகாந்துடன் இணைந்து நடனமாடி இருக்கிறார் அனிருத்.

    அதைத்தொடர்ந்து தற்பொழுது அமிதாப் பச்சனுடன் இணைந்து வேட்டையன் படப்பிடிப்பின் போது எடுக்கப் பட்ட புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த ஒருவரை ஒருவர் கட்டி அணைத்த படியும், சிரித்து கொண்டு கருப்பு நிற கோட் சூட்டில் ஸ்டைலாக போஸ் கொடுத்தபடி இருக்கின்றனர்.

    33 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சனும் ரஜினிகாந்தும் இணைந்து நடிக்கவுள்ளனர். இதற்கு முன் 1991 ஆம் ஆண்டு 'ஹம்' என்ற இந்தி படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தகது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'அண்ணாமலை' 'பாட்ஷா' போன்ற படங்களில் ரஜினியின் இண்ட்ரோ பாடல் அனைவரையும் கவர்ந்தது
    • தற்போது வெளி வந்த ரஜினி படங்களில் 'இன்ட்ரோ பாடல்' இல்லாமல் படம் வெளி வந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து இருந்தனர்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' புதிய படத்தை டைரக்டர் ஞானவேல்ராஜா இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

    லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் இன்ட்ரோ பாடல்கள் இல்லாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. 'அண்ணாமலை' 'பாட்ஷா' போன்ற படங்களில் ரஜினியின் இண்ட்ரோ பாடல் அனைவரையும் கவர்ந்தது.

    தற்போது வெளி வந்த ரஜினி படங்களில் 'இன்ட்ரோ பாடல்' இல்லாமல் படம் வெளி வந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து இருந்தனர். எனவே 'வேட்டையன்' படத்தில் ரஜினிகாந்த்தின் அறிமுக பாடல் (இன்ட்ரோ பாடல்) மீண்டும் கொண்டுவர படக்குழு திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்கான படப்பிடிப்பு வருகிற 25 -ந்தேதி சென்னை சுந்தர் ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான 'செட்' போடப்பட்டு உள்ளது. மேலும் இந்த பாடலுக்கு பிரபல நடன அமைப்பாளர் தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிய உள்ளார்.

    இதில் ரஜினியின் அறிமுக பாடலை அவர் பிரமாண்டமாக உருவாக்க உள்ளார். இதில் ரஜினியுடன் ஏராளமான நடன கலைஞர்கள் பங்கேற்று நடனமாடுகிறார்கள்.

    இந்த பாடல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'அண்ணாமலை' 'பாட்ஷா' படத்தில் வரும் அறிமுக பாடல் போன்று பிரமாண்டமாக தயார் செய்யும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் 'வேட்டையன்' படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் வேட்டையன் படத்தின் இன்ட்ரோ பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து இசையமைப்பாளர் அனிருத் இணைந்து நடமாடியுள்ளார் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'கூலி' படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய இசையை பயன்படுத்தியதாக,இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
    • தற்போது இது சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது படம் "கூலி" .இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இப்படம் தங்க கடத்தல் பின்னணி கதையை கொண்டு உருவாக உள்ளதாகவும் ரஜினி 'மாபியா' ''டான்" வேடத்தில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.




    இந்நிலையில் ரஜினியுடன் பிரபல இந்தி நடிகர்கள் ரன்வீர் சிங், நாகார்ஜுனா, நடிகை ஷோபனா ,ஸ்ருதி ஹாசன் , நடிப்பதாக தகவல் வெளியானது. இப்படத்தின் 'சூட்டிங்' வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.

    இப்படத்தின் முதல் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. இதில், நடிகர் ரஜினிகாந்த் இரு கைகளிலும் கைகடிகாரத்தால் ஆன விலங்கை கட்டியிருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றது.



    கடந்த சில நாட்களுக்கு முன் அந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியானது. அதில், இளையராஜா இசையமைப்பில் ரஜினிகாந்த் நடித்த 'தங்கமகன்' படத்தில் இடம்பெற்ற "வா வா பக்கம் வா" பாடலின் இசையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது

    தான் இசையமைத்த பாடல்கள் முழுவதும் தனக்கு தான் சொந்தம் என்றும் தனது பாடல்களை அனுமதி இல்லாமல் மேடைகளில் பாடக்கூடாது என்றும் மற்ற படங்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் ஏற்கனவே இளையராஜா கூறி இருந்தார்.




    இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தற்போது இது சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதுவரை யூடியூபில் 50 லட்ச பார்வைகளை பெற்று டிரெண்டிங் நம்பர் 1 இல் உள்ளது.
    • சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

     லோகேஷ் கனகராஜ் அவரது படங்களின் ப்ரோமோ வீடியோவை மிக வித்தியாசமாகவும் நேர்த்தியாகவும் கதையோடு ஒரு அங்கமாக அந்த ப்ரோமோ வீடியோக்களை எடுப்பதில் திறம் பெற்றவர். அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று எல்லாரும் எதிர்பார்க்கப்பட்ட தலைவர் 171- வது படமான கூலி திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.

    இதற்கு முன் விக்ரம் படத்தின் ப்ரோமொ வீடியோவில் வரும் 'ஆரம்பிக்கலாங்களா', லியோ படத்தில் வரும் 'ப்லடி ஸ்வீட்' வசனங்கள் மிகவும் வைரலாகியது.

    அதைத் தொடர்ந்து கூலி படத்தின் ப்ரோமோ வீடியோவில் ஒரு கேங்கஸ்டர் கும்பல் துறைமுகத்தில் பல வகையான தங்கத்தை கடத்தி அதை அனுப்புவதற்கு பேக் பண்ணி கொண்டு இருக்கின்றனர். அப்பொழுது ஒரு ஃபோன்காலில் துறைமுகத்தில் செக்யூரிட்டி அடித்து விட்டு ஒருவன் உள்ளே வருகிறான் என்ற தகவலை கூறுகிறான்.

    ரஜினிகாந்த் உள்ளே வந்து அனைவரையும் மாஸாகவும், ஸ்டைலாகவும் அடிக்கிறார். அடிக்கும் பொழுது 1982 ஆம் ஆண்டு வெளிவந்த 'ரங்கா' படத்தில் புகழ் பெற்ற 'அப்பாவும் தாத்தாவும்" என்ற வசனத்தை பேசிக்கொண்டே அடிக்கிறார்.

    அடித்து முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜின் ஃபைனல் டச்சாக இதில் ரஜினிகாந்து 'முடிச்சடலாம் மா!!' என்ற வசனத்தை பேசுகிறார். தற்பொழுது இந்த டைடில் டீசர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. . இதுவரை யூடியூபில் 50 லட்ச பார்வைகளை பெற்று டிரெண்டிங் நம்பர் 1 இல் உள்ளது.

    ரஜினிகாந்த இதற்கு முன் உழைப்பாளி, மன்னன், முள்ளும் மலரும் போன்ற படங்களில் கூலி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எந்த மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

    இதற்குமுன் 1983 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் மன்மோகன் தேசாய் இயக்கத்தில் இந்தி திரைப்படமான கூலி வெளியாகியது.

    1991 ஆம் ஆண்டு சுரேஷ் பாபு தயாரிப்பில் ராகவேந்திரா ராவ் இயக்கத்தில் வெங்கடேஷ் மற்றும் தபு நடிப்பில் தெலுங்கு திரைப்படமான கூலி வெளியாகியது.

    1995 ஆம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் சரத்குமார் மற்றும் மீனா இணைந்து நடித்து வெளியான தமிழ் திரைப்படமான கூலி வெளியாகியது.

     

    இதைத்தொடர்ந்து தற்பொழுது ரஜிகாந்தின் 171 - வது படத்திற்கும் 'கூலி' என்ற தலைப்பை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் லோகேஷின் சினிமாடிக் யூனிவர்சில் சேராது என தெரிவித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். அன்பறிவு ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்ற போகிறார்கள். சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர். இப்படத்தை குறித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
    • படத்தில் ரன்வீர் சிங் மற்றும் நாகார்ஜூனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

     வேட்டையன் படத்திற்கு பிறகு ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. மேலும் ரசிகர்களிடம் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது.

    படத்தில் ரன்வீர் சிங் மற்றும் நாகார்ஜூனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ருதி ஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியது. நேற்று லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் நாளை ஆறு மணி முதல் D.I.S.C.O என்ற தலைப்பில் போஸ்ட்ரை வெளியிட்டார்.

    படத்தின் தலைப்பு டிஸ்கோவாக இருக்குமோ என ரசிகர்களிடம் கேள்வி எழுந்த நிலையில் தற்பொழுது படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் கூலி  என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • . 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
    • படத்தின் தலைப்பு டிஸ்கோவாக இருக்குமோ என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது

    ரஜினி வேட்டையன் படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

    ரஜினியின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. மேலும் ரசிகர்களிடம் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது.

    படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்கவுள்ளார் மற்றும் நாகார்ஜுனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்ற தகவல் வெளியாகியது. இதைதொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் ஏப்ரல் 22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

    நேற்று லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் நாளை ஆறு மணி முதல் D.I.S.C.O என்ற தலைப்பில் போஸ்ட்ரை வெளியிட்டார்.

    படத்தின் தலைப்பு டிஸ்கோவாக இருக்குமோ என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது. இன்று மாலை டைட்டில் மற்றும் காட்சி முன்னோட்டம் வெளியாகும் நிலையில் லோகேஷ் கனகராஜ் அவரது துணை இயக்குனர்களுடன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் 'தலைவர் 171' படத்தில் ரஜினியுடன் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா இணைய உள்ளார்
    • முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

    இந்த படத்துக்குப் பிறகு ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.




    மேலும் தலைவர் -171 படம் தங்க கடத்தல் பின்னணி கதையை கொண்டு உருவாக உள்ளதாகவும் இந்தப் படத்தில் ரஜினி 'மாபியா' ''டான்" வேடத்தில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் தலைவர் 171- படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இப்படத்தில் நடிக்க ரன்வீர் சம்மதித்து உள்ளதாக தகவல் வெளியாகியது.

    ரஜினியுடன் நடிகை ஷோபனா 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.மேலும் இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் சத்யராஜ் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.




    மேலும் ரஜினியின் மகளாக ஸ்ருதி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .இப்படத்தின் 'சூட்டிங்' வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. படத்தின் "பர்ஸ்ட் லுக்" போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

    இந்நிலையில் இப்படத்தின் ''டைட்டில்' இன்று மாலை ( 22 - ந் தேதி) 6 மணிக்கு வெளியாக உள்ளது. தலைவர் - 171 படத்துக்கு 'டைட்டில்' கழுகு, ராணா, தங்கம் அல்லது கடிகாரம் என 4 பெயர்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. இந்த 4 ல் ஒன்று தான் இப்படத்தின் டைட்டிலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்நிலையில் 'தலைவர் 171' படத்தில் ரஜினியுடன் தெலுங்கு  நடிகர் நாகார்ஜுனா இணைய உள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×