search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் - 3வது சுற்றில் எலீனா ரிபாகினா அதிர்ச்சி தோல்வி
    X

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் - 3வது சுற்றில் எலீனா ரிபாகினா அதிர்ச்சி தோல்வி

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை தோல்வி அடைந்தார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினா, ரோமானியாவின் சொரானா சிர்ஸ்டியுடன் மோதினார்.

    இதில் சிர்ஸ்டி முதல் செட்டை வென்றார். 2வது செட்டை ரிபாகினா போராடி கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை சிர்ஸ்டி வென்றார்.

    இறுதியில், சிர்ஸ்டி 6-3, 6-7 (6-8), 6-4 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இதன்மூலம் எலீனா ரிபாகினா இத்தொடரில் இருந்து வெளியேறினார்.

    Next Story
    ×