என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
பாலியல் குற்றச்சாட்டு காரணமாக 48 பேரை வீட்டுக்கு அனுப்பிய கூகுள்
Byமாலை மலர்26 Oct 2018 4:41 AM GMT (Updated: 26 Oct 2018 4:58 AM GMT)
கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 48 பேரை கூகுள் பணிநீக்கம் செய்திருக்கிறது. #Google
கூகுள் நிறுவனத்தில் சக ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுத்தியதாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 48 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த சில ஆண் ஊழியர்களை கூகுள் நிறுவனம் காப்பாற்றியதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பு கூகுள் ஊழியர்களுக்கு அந்நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை அனுப்பிய மின்னஞ்சலில் இடம்பெற்று இருந்தது.
இது 2014ம் ஆண்டில் ஆன்ட்ராய்டு மென்பொருள் அதிகாரி பாலியல் குற்றச்சாட்டு காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்திக்கு நேரடி பதிலாக அமைந்தது.
சுந்தர் பிச்சை எழுதியிருக்கும் மின்னஞ்சலில், 2015ம் ஆண்டு கூகுள் பல்வேறு கடின முடிவுகளை எடுத்தது. இவற்றில் கூகுள் துணை தலைவர்கள், மூத்த துணை தலைவர்கள் கூகுள் நிறுவனத்தில் ஒரே துறை அல்லது மற்ற துறைகளில் பணியாற்றுவோருடன் உறவு பாராட்டும் பட்சத்தில் அவற்றை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. என குறிப்பிட்டிருக்கிறார்.
இத்துடன் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக கூகுளில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 48 ஊழியர்களில் 13 பேர் மூத்த மேளாலர்கள் அல்லது அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர் என சுந்தர் பிச்சை மேலும் தெரிவித்தார். இந்த 13 பேருக்கும் கூகுள் சார்பில் பணிவிடுப்பு மற்றும் நிலுவைத் தொகை எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
"கூகுளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்," என்றும் சுந்தர் பிச்சை மின்னஞ்சலில் தெரிவித்திருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X