என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்
X
விரைவில் இந்தியா வரும் மோட்டோ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்8 Jan 2022 6:14 AM GMT (Updated: 8 Jan 2022 6:14 AM GMT)
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 பெற்றது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.
இந்த நிலையில், மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரியவந்துள்ளது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி மாத துவக்கத்திலோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
பி.ஐ.எஸ். தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் எக்ஸ்.டி.2201-01 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதுதவிர ஸ்மார்ட்போனின் மற்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. பி.ஐ.எஸ். தளத்தில் இடம்பெறும் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதே நிலை புதிய மோட்டோ ஸ்மார்ட்போனிற்கும் நடைபெறும் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X