என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்
X
இணையத்தில் லீக் ஆன மோட்டோ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள்
Byமாலை மலர்29 Dec 2021 7:19 AM GMT (Updated: 29 Dec 2021 7:19 AM GMT)
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் இம்மாத துவக்கத்தில் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் வெளியீட்டை தொடர்ந்து மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 மாடல் சர்வதேச சந்தையில் மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மோட்டோ எட்ஜ்30 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.
அதன்படி புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், 12 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 சர்வதேச சந்தையில் மோட்டோ எட்ஜ்30 ப்ரோ பெயரில் அறிமுகமாகுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இதுதவிர மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்பெஷல் எடிஷன் மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து மோட்டோரோலா சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X