என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்

X
மோட்டோரோலா
அண்டர் ஸ்கிரீன் கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்
By
மாலை மலர்7 Dec 2021 11:30 AM GMT (Updated: 7 Dec 2021 11:30 AM GMT)

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் டிசம்பர் 9 ஆம் தேதி ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதனிடையே மோட்டோரோலா நிறுவனம் அண்டர் ஸ்கிரீன் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. லெனோவோ நிறுவன மொபைல் பிரிவுக்கான பொது மேலாளர் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் அண்டர் ஸ்கிரீன் கேமரா கொண்டிருக்கும் என தெரிவித்து இருக்கிறார்.

இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்ட முதல் அண்டர் ஸ்கிரீன் கேமரா ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 60 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட இருக்கிறது. எட்ஜ் எக்ஸ்30 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அசத்தலான புல்-ஸ்கிரீன் அனுபவத்தை வழங்குகிறது.
இதில் வழங்கப்பட இருக்கும் மற்ற அம்சங்கள் ரகசியமாகவே உள்ளன. எனினும், தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் பார்க்க எட்ஜ் எக்ஸ்30 போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
