என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
மத்திய அரசு உத்தரவுக்கு எதிராக சட்ட போராட்டம் துவங்கிய வாட்ஸ்அப்
Byமாலை மலர்26 May 2021 10:12 AM GMT (Updated: 26 May 2021 10:12 AM GMT)
மத்திய அரசு பிறப்பித்து இருக்கும் விதிமுறைகளை ஏற்கும் விவகாரத்தில் வாட்ஸ்அப் வழக்கு தொடர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு அறிவித்து இருக்கும் புதிய விதிமுறைகளை தடை செய்ய வலியுறுத்தி வாட்ஸ்அப் சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இந்த விதிமுறைகள் பேஸ்புக் மற்றும் இதர நிறுவனங்கள் வழங்கி வரும் பிரைவசி பாதுகாப்பை மீறும் வகையில் இருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில், வாட்ஸ்அப் தொடர்ந்து இருக்கும் வழக்கில் புது விதிமுறைகள் இந்திய அரசியலமைப்பின் தனியுரிமை கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறது என உயர்நீதிமன்றம் உத்தரவிட கோரியுள்ளது. தகவலை முதலில் உருவாக்கியவர் விவரங்களை அரசு கோரும் பட்சத்தில் அதனை வழங்க புது விதிமுறைகளில் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் அனைத்து சாட்களும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுவதால், அந்த விவரங்களை வழங்க முடியாது என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாட்ஸ்அப் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. புது விதிமுறைகளை ஏற்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X