என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
அசத்தல் தொழில்நுட்பத்துடன் உருவாகும் புது பிக்சல் ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்5 May 2021 4:32 AM GMT (Updated: 5 May 2021 4:32 AM GMT)
கூகுள் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
கூகுள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கென சொந்த பிராசஸர்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்த பிராசஸர் வைட்சேப்பல் அல்லது GS101 என அழைக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் GS101 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் அல்ட்ரா-வைடு-பேண்ட் தொழில்நுட்பம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. GS101 என்பது கூகுள் உருவாக்கும் பிரத்யேக மொபைல் பிராசஸர் ஆகும்.
இது அடுத்த பிக்சல் சாதனங்களில் வழங்கப்பட இருக்கிறது. இந்த பிராசஸர் கொண்டு இரண்டு ஸ்மார்ட்போன்கள் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இவை ரேவென் மற்றும் ஒரியோல் என அழைக்கப்படுகின்றன. ஆண்ட்ராய்டு 12 தளத்தில் உள்ள பில்ட்-இன் ஏபிஐ அல்ட்ரா-வைடு-பேண்ட் தொழில்நுட்பத்திற்கான வசதி கொண்டுள்ளது.
ஆப்பிள் ஏர்டேக் மற்றும் சாம்சங் ஸ்மார்ட் டேக் போன்ற டிராக்கர்ளிலும் இதேபோன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சந்தையில் இரு முன்னணி நிறுவனங்களை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் தனது சொந்த டிராக்கரை அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X