என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
தடுப்பூசி மையங்களுக்கு வழிகாட்டும் அரசு சாட்பாட்
Byமாலை மலர்3 May 2021 10:33 AM GMT (Updated: 3 May 2021 10:33 AM GMT)
இந்தியாவில் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான தடுப்பூசி திட்டம் விரிவான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மூன்றாம் கட்ட தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி 18 வயதுடையோரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் CoWIN தளத்தில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த தளத்தில் பயனர் அருகாமையில் உள்ள தடுப்பூசி மையங்கள் பற்றிய விவரம் வழங்கப்படுகிறது. எனினும், வாட்ஸ்அப் செயலியில் இயங்கும் மத்திய அரசின் MyGov Corona Helpdesk சாட்பாட் பொது மக்களுக்கு, அவர்களின் அருகாமையில் செயல்படும் தடுப்பூசி மையம் பற்றிய விவரங்களை வழங்குகிறது.
இந்த சாட்பாட் சேவையானது கொரோனா தொற்று குறித்து பரவும் போலி தகவல்களை குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான பத்தே நாட்களில் இந்த சேவையை சுமார் 1.7 கோடி பேர் பயன்படுத்த துவங்கினர். இந்த சேவையில் தடுப்பூசி மையம் பற்றிய தகவல்கள் வழங்கப்படுவதை மத்திய அரசு ட்விட்டர் மூலம் தெரிவித்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X