என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் 5ஜி மாடல் வெளியீட்டு விவரம்
Byமாலை மலர்22 Dec 2020 4:25 AM GMT (Updated: 22 Dec 2020 4:25 AM GMT)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் 2021 ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் ஆகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் இதர தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன், சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ21 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். கேலக்ஸி ஏ22 5ஜி தவிர சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போனையும் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய தகவல்களின் படி கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் ஹூவாய், ஒப்போ, விவோ மற்றும் சியோமி நிறுவன மாடல்களுக்கு போட்டியாக அமையலாம்.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X