என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
விரைவில் அறிமுகமாகும் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன்கள்
Byமாலை மலர்14 Oct 2020 4:27 AM GMT (Updated: 14 Oct 2020 4:27 AM GMT)
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக விவரம் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் இன்று (அக்டோபர் 14) புதிய ஒன்பிளஸ் 8டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட இருக்கிறது. இது சர்வதேச சந்தை மட்டுமின்றி இந்தியாவிலும் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், ஒன்பிளஸ் 8டி சீரிசை தொடர்ந்து ஒன்பிளஸ் நார்டு என்10 5ஜி ஸ்மார்ட்போன் அக்டோபர் 26 ஆம் தேதி வெளியிடு இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது வரவிருக்கும் ஒன்பிளஸ் நார்டு போன்கள் பற்றி தகவல் ஒன்பிளஸ் தளத்தில் இதுவரை குறிப்பிடப்படவில்லை.
ஒன்பிளஸ் நார்டு என்10 5ஜி வெளியீட்டு விழா இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு நடைபெற இருக்கிறது. ஒன்பிளஸ் நார்டு என்10 5ஜி ஸ்மார்ட்போனில் 6.49 இன்ச் டிஸ்ப்ளே ,90HZ ரிப்ரெஷ் ரேட், 6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இதுதவிர 64 மெகாபிக்சல் சென்சார் கொண்ட பிளாக்ஷிப் அல்லாத ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இது ஆகும். புதிய ஒன்ப்ளஸ் என்10 5ஜி மாடல் விலை இந்தியாவில் ரூ. 29,500 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X