என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
டிக்டாக் தடை விவகாரத்தில் அதற்கு வாய்ப்பே இல்லை - டிரம்ப் அதிரடி
Byமாலை மலர்11 Sep 2020 7:00 AM GMT (Updated: 11 Sep 2020 7:00 AM GMT)
டிக்டாக் செயலியின் தடை விவகாரத்தில் அதற்கு துளியும் வாய்ப்பே இல்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்து இருக்கிறார்.
சீன நிறுவனமான பைட்-டேன்ஸ் தனது டிக்டாக் செயலியை விற்பனை செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பே இல்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்து இருக்கிறார். டிக்டாக் தடை உறுதியாவது, செயலியை விற்பனை செய்வது தவிர அவர்களுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை என அவர் தெரிவித்தார்.
அதிபர் டிரம்ப் கருத்து டிக்டாக் சார்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. பைட்-டேன்ஸ் நிறுவனம் தனது டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை விற்பனை செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
டிரம்ப்பின் முந்தைய உத்தரவின் படி டிக்டாக் அமெரிக்க உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விற்பனை செய்ய வேண்டும். இதுவரை டிக்டாக்கை வாங்குவது பற்றி எந்த நிறுவனமும் இறுதியான முடிவை அறிவிக்கவில்லை.
இதுவரை வெளியான தகவல்களின் படி டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. குறிப்பாக மைக்ரோசாப்ட், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X