என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
சத்தமின்றி உருவாகும் சாம்சங் கேலக்ஸி ஏ12
Byமாலை மலர்30 Aug 2020 5:45 AM GMT (Updated: 29 Aug 2020 11:56 AM GMT)
சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ சீரிஸ் பிரிவில் அறிமுகமாக இருப்பதாகவும் இது கேலக்ஸி ஏ12 பெயரில் அழைக்கப்பட இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ11 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் எஸ்எம்-ஏ125எஃப் எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. முந்தைய கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் எஸ்எம்-ஏ115எஃப் எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என இருவித மெமரி ஆப்ஷன்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இத்துடன் எல்சிடி ஸ்கிரீன், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் மற்றும் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
முந்தைய கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வழங்கப்பட்டு இருந்தது. இத்துடன் பன்ச் ஹோல் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய கேலக்ஸி ஏ12 இதே வடிவமைப்பு கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X