என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
இதை செய்தால் அந்த அம்சம் வழங்குவோம் - டிரெண்ட் ஆகும் ட்விட்டர் அம்சம்
Byமாலை மலர்3 July 2020 11:51 AM GMT (Updated: 3 July 2020 11:51 AM GMT)
ட்விட்டரில் புதிய அம்சம் வழங்குவது பற்றிய பயனரின் கேள்விக்கு அந்நிறுவனம் அளித்துள்ள பதில், டிரெண்ட் ஆகி இருக்கிறது.
ட்விட்டர் நிறுவனம் தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு காலக்கட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய துவங்கினால் தனது தளத்தில் எடிட் பட்டன் வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறது.
உலகம் முழுக்க சுமார் 32 கோடி பயனர்களை கொண்டிருக்கும் ட்விட்டர் தளத்தில் பயனர் பதிவிட்ட ட்விட்களை எடிட் செய்யும் அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை. அந்த வகையில் பதிவிட்ட ட்விட்களை எடிட் செய்வதற்கான வசதியை வழங்குமாறு அதன் பயனர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பயனர் கோரிக்கைக்கு நீண்ட காலம் பதில் அளிக்காமல் இருந்த ட்விட்டர், தற்சமயம் அளித்துள்ள பதில் டிரெண்ட் ஆகி வருகிறது. அதாவது கொரோனா காலக்கட்டத்தில் பயனர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய துவங்கினால் எடிட் பட்டன் வழங்கப்படும் என ட்விட்டர் பயனர் ஒருவரின் கேள்விக்கு பதிலாக அளித்து இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X