என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
அமெரிக்க சான்று பெற்ற மோட்டோ ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்14 Dec 2019 5:58 AM GMT (Updated: 14 Dec 2019 5:58 AM GMT)
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன் அமெரிக்க வலைத்தளத்தில் சான்று பெற்று இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது.
அந்த வகையில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் கொண்ட மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன் அமெரிக்க வலைத்தளமான FCC-யின் சான்று பெற்று இருக்கிறது. இதில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் XT2041-1 எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்க வலைத்தளத்தின் படி புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 6.3 இன்ச் டிஸ்ப்ளே, 26 வாட் டர்போ சார்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ சிறப்பம்சங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் பிளாஸ்டிக் பேக், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் பின்புற கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X