என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
இரட்டை ஸ்கிரீன் கொண்ட சாம்சங் ஃப்ளிப் போன்
Byமாலை மலர்3 Nov 2019 4:47 AM GMT (Updated: 3 Nov 2019 4:47 AM GMT)
இரட்டை ஸ்கிரீன் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இது கடந்த ஆண்டு சாம்சங் அறிமுகம் செய்த டபுள்யூ 2019 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். டபுள்யூ20 5ஜி மாடல் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் முந்தைய டபுள்யூ சீரிஸ் போன்களில் இரட்டை டிஸ்ப்ளே மற்றும் ஃப்ளிப் வசதி வழங்கப்பட்டு இருந்தது.
ஸ்மார்ட்போனின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கும். இது ஃப்ளிப் வடிவமைப்பில் உருவான மடிக்கக்கூடிய போன் ஆகும். முன்னதாக இதேபோன்ற வடிவமைப்பு கொண்ட மொபைல் போனினை சாம்சங் கடந்த வாரம் நடைபெற்ற சாம்சங் டெவலப்பர் நிகழ்வில் அறிமுகம் செய்தது.
புதிய மாடல் புளூம் என்ற குறியீட்டு பெயரில் SM-F700F எனும் மாடல் நம்பரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதில் 6.7 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவும், 1 இன்ச் கவர் டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனமும் புதிய ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை நவம்பர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X