என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
ரூ.298 விலையில் புதிய சலுகை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
Byமாலை மலர்20 Feb 2019 8:10 AM GMT (Updated: 20 Feb 2019 8:10 AM GMT)
பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. #BSNL
பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.298 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.298 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய சலுகையில் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பலன்கள் வழங்கப்படுகிறது. புதிய சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.297 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது.
போட்டி நிறைந்த சந்தையில் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய சலுகையை அறிவித்திருக்கிறது. முன்னதாக போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு இலவச தினசரி டேட்டா பலன்களை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்தது.
புதிய ரூ.298 சலுகை பி.எஸ்.என்.எல். சிறப்பு வவுச்சராக அறிவிக்கப்பட்டிருப்பதாக டெலிகாம் டாக் தெரிவித்திருக்கிறது. இந்த சலுகையில் 54 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 40kbps ஆக குறைக்கப்படும் இந்த சலுகையில் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.
புதிய ரூ.298 சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.299 சலுகைக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. ரூ.299 சலுகையில் ரிலையன்ஸ் ஜியோ 28 நாட்களுக்கு 84 ஜி.பி. டேட்டா வழங்குகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ அதிவேக 4ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், பி.எஸ்.என்.எல். 3ஜி மற்றும் 2ஜி சேவையை வழங்குகிறது. வோடபோன் நிறுவனம் ரூ.255 விலையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X