என் மலர்
தொழில்நுட்பம்

14 வயது சிறுவனின் கல்விக்கு உதவும் ஆப்பிள் - இதுதான் காரணமா?
ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ்டைம் சேவையில் பிழை கண்டறிந்த 14 வயது சிறுவனின் கல்விக்கு உதவி செய்வதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. #Apple
ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ்டைம் செயலியில் பயனர் விவரங்களை ஒட்டுக்கேட்கும் பிழை கடந்த வாரம் கண்டறியப்பட்டது. பிழை இருப்பது உறுதி செய்யப்பட்டதும் ஃபேஸ்டைமில் வீடியோ காலிங் வசதி நிறுத்தப்பட்டு, பிழையை சரி செய்வதற்கான அப்டேட் விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிழையை சரிசெய்வதற்கான அப்டேட்டை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இத்துடன் பிழையை கண்டறிந்த சிறுவனின் கல்வி செலவை ஏற்றுக் கொள்வதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. மேலும் தாம்ப்சன் மற்றும் டேவென் மோரிஸ் குடும்பத்தாருக்கு ஆப்பிள் நன்றி தெரிவித்துள்ளது.
க்ரூப் ஃபேஸ்டைம் கோளாறு முதலில் அரிசோனாவை சேர்ந்த 14 வயது சிறுவன் கண்டறிந்தான். ஜனவரி 19 ஆம் தேதி தனது நண்பருக்கு அழைப்பை மேற்கொள்ளும் போது அவரது நண்பர் அழைப்பை ஏற்கவில்லை எனினும் அவரது உரையாடல்களை கேட்க முடிந்ததாக தெரிவித்தார்.

பின் சிறுவனின் தாயார் மிஷல் தாம்ப்சன் பாதுகாப்பு கோளாறு பற்றி ஆப்பிள் நிறுவனம் மற்றும் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்தார். பின் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் வேகமாக பரவியது. ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளம் கொண்டிருந்த ஐபோன், ஐபேட் மற்றும் மேக் ஓ.எஸ். மோஜேவ் இயங்குதளம் கொண்ட சாதனங்களில் க்ரூப் ஃபேஸ் டைம் அம்சத்தில் குறைபாடு ஏற்பட்டது.
பிழை சரி செய்யப்பட்டது மட்டுமின்றி ஃபேஸ்டைம் சேவை முழைமையாக சோதனை செய்யப்பட்டு அதற்கான அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மென்பொருள் பிழை சார்ந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் விதத்தை மாற்ற இருப்பதாக ஆப்பிள் கடந்த வாரம் அறிவித்தது.
Next Story






