என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
மாதம் 50 கோடி பேர் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் அம்சம்
Byமாலை மலர்31 Jan 2019 10:24 AM GMT (Updated: 31 Jan 2019 10:24 AM GMT)
இன்ஸ்டாகிராம் செயலியில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்டோரிஸ் அம்சத்தினை ஒவ்வொரு மாதமும் சுமார் 50 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். #Instagram #Apps
இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் என்ன செய்கின்றனர் என்பதை அவரவர் ஃபாளோவர்களிடம் தெரிவிக்க ஏதுவாக ஸ்டோரிஸ் அம்சம் சேர்க்கப்பட்டது. இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் அம்சத்தை தற்சமயம் ஒவ்வொரு மாதமும் சுமார் 50 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தெரிவித்தார்.
ஃபேஸ்புக் காலாண்டு வருவாய் அறிக்கையை வெளியிட்டு பேசிய மார்க் சூக்கர்பர்க், "இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரிஸ் அம்சத்தினை ஒவ்வொரு மாதமும் சுமார் 50 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்," என தெரிவித்தார்.
இன்ஸ்டாகிராம் செயலியை சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சுமார் 40 கோடி பேர் பயன்படுத்தினர். அந்த வகையில் ஆறு மாதங்களில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 10 கோடி வரை அதிகரித்திருக்கிறது.
இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளிலும் ஸ்டோரிஸ் அம்சம் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரிஸ் அம்சம் 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் பயனர்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோ உள்ளிட்டவற்றை ஸ்டோரிக்களாக பதிவு செய்யலாம்.
முன்னதாக இதேபோன்ற அம்சம் ஸ்னாப்சாட் செயலியில் மெமரிஸ் என்ற பெயரில் வழங்கப்பட்டிருந்தது. தற்சமயம் ஃபேஸ்புக் இந்த அம்சத்தை கொண்டு வருவாய் ஈட்டத் துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பகுதியில் விளம்பரங்கள் தோன்ற துவங்கின. #Instagram #Apps
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X