என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ெரயில் பாதை"
- கலெக்டர் தலைமையில் நடந்தது
- விவசாயி குண்டுகட்டாக வெளியேற்றம்
ஆரணி:
திருவண்ணமலை மாவட்டம் ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்தில் திண்டிவனம் நகரி இருப்பு பாதை திட்டம் நில எடுப்பு நடவடிக்கை விசாரணை கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் உதவி கலெக்டர் தனலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் ஆரணி அருகே உள்ள இரும்பேடு கிராமத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திண்டிவனம், செய்யார், வந்தவாசி, ஆரணி, ஆற்காடு வழியாக நகரி வரையில் ெரயில்வே பாதை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு நில ஆர்ஜிதம் நடைபெற்றது.
இதற்கு விவசாயிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில் திண்டிவனம் நகரி வரையிலான ெரயில் பாதை நிலம் ஆர்ஜிதம் நில எடுப்பு ஆவண சரிபார்ப்பு செய்யபட்டது.
அப்போது விவசாயி சங்கத்தை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் முறையிட்டு பேச முயன்றனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ஒரு விவசாயியை குண்டு கட்டாக தூக்கி அப்புறபடுத்தி அலுவலகத்திற்கு வெளியில் விட்டு சென்றனர்.
இதில் பங்கேற்ற 244 பேரிடமிருந்து நில எடுப்பு ஆவணம் சரிபார்த்து ரூ.40 கோடியே 83 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 20.81 ஹெக்டர் நிலத்தை ஆவணம் சரி பார்த்து நிலத்தை கையக படுத்தியுள்ளனர்.
- புனலூர்-கொல்லம் புதிய மின்மய அகல ெரயில் பாதையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
- இதற்கான தொடக்க விழா கேரள மாநிலம் கொச்சியில் இன்று மாலை 6 மணியளவில் நடக்க உள்ளது.
மதுரை
இந்தியாவில் உள்ள அனைத்து ெரயில் பாதை களும் மின்மயமாக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை கோட்டத்தில் புனலூர்- கொல்லம் இடையேயான அகல ரெயில் பாதை, ரூ.76 கோடி செலவில் மின்மய மாக்கப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க விழா கேரள மாநிலம் கொச்சியில் இன்று மாலை 6 மணியளவில் நடக்க உள்ளது. அப்போது பிரதமர் மோடி புனலூர்- கொல்லம் அகல மின் ெரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அப்போது அவர் ஒரு சிறப்பு ெரயிலையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படும் கொல்லம் -புனலூர் ெரயில்கள், நாளை (2-ந் தேதி) முதல் மின்சார ெரயில் பாதை மூலம் இயக்கப்பட உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்