search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹிஜாப் போராட்டம்"

    • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தெக்ரானில் கலவரத்தை தூண்டியதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
    • அரசுக்கு எதிரான பிரசாரம் செய்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஹிஜாப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரபலங்கள் மீது கைது நடவடிக்கை பாய்ந்து வருகிறது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஈரான் நாட்டின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமியின் மகள் பேசே ஹாஷிமிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை அவரது வக்கீல் உறுதிப்படுத்தினார்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தெக்ரானில் கலவரத்தை தூண்டியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். அரசுக்கு எதிரான பிரசாரம் செய்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஏற்கனவே மேசே ஹாஷிமி, 2009-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அரசுக்கு எதிரான தவறான தகவல்களை பரப்பியதாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டது.


    • ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
    • கடந்த மாதம் 16-ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்ட 22 வயது இளம்பெண் மாஷா அமினி மர்மமாக இறந்தார்.

    டெஹ்ரான்:

    ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. கடந்த மாதம் 16-ம் தேதி டெஹ்ரானில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 22 வயது இளம்பெண் மாஷா அமினி மர்மமாக இறந்தார். போலீசார் தாக்கியதால் அவர் பலியானதாக குற்றச் சாட்டு எழுந்தது. அதன்பிறகு ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்தது.

    இதில் பங்கேற்ற பெண்கள் ஹிஜாப் உடையைக் கிழித்தும், எரித்தும் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களுக்கும், போலீ சாருக்கும் இடையே நடந்த மோதலில் பலர் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், மாஷா அமினி இறந்து 40 நாள் ஆனதையொட்டி அவரது சொந்த ஊரில் மவுன ஊர்வலம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது பாதுகாப்புப் படை போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் இறந்துவிட்டனர்.

    இச்சம்பவத்துக்கு அந்நாட்டு மனித உரிமை துறை கடும் கண்டனம் தெரிவித்தது. சட்டவிரோதமாக பொறுப்பற்ற முறையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு உள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியது.

    • அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த போராட்டங்களை தூண்டி விட்டுள்ளன.
    • ஈரானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க சதி திட்டம்.

    ஈரானில், மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் உடையை சரியாக அணியவில்லை கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் 16-ந் தேதி விசாரணையின்போது அவர் திடீரென மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அவரை அடித்து கொன்று விட்டதாக கூறி ஈரானில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

    போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஹிஜாப் உடைகளை தீ வைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். தொடர் போராட்டத்தால் ஈரானில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. போராட்டக்காரர்கள்- போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 92 பேர் இறந்துவிட்டதாக ஈரான் மனித உரிமை குழு தெரிவித்து உள்ளது. 


    இதில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஈரான்- ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் 41 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 1,500 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், மேலும் அது தீவிரமடையாமல் தடுக்க ஈரானில் சமூக வலை தளங்கள் முடக்கப்பட்டு உள்ளன.

    இந்நிலையில், ஹிஜாப் போராட்டம் ஈரானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வெளிநாட்டு சதி என்று அந்நாட்டு தலைவர் அயதுல்லா அலி கொமேனி தெரிவித்துள்ளார். போராட்டம் தொடங்கியது முதல் மவுனம் காத்து வந்த அவர் தனது கருத்தை முதன்முறையாக தெரிவித்துள்ளார்.

    மாஷா அமினி போலீஸ் காவலில் இறந்ததை அறிந்து தாம் மனம் உடைந்ததாகவும் அவரது மரணம் மிகவும் துயரமானது என்றும் கொமெனி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த போராட்டங்களை திட்டமிட்டு தூண்டி விட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 150-க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி, ஆர்ப்பாட்டம் போன்றவை நடந்து வருகிறது.
    • கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஈரான்- ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் 41 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது.

    ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    கடந்த மாதம் 16-ந் தேதி விசாரணையின்போது அவர் திடீரென மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அவரை அடித்து கொன்றுவிட்டதாக கூறி போராட்டங்கள் நடந்து வருகிறது.

    மாஷா அமினி இறந்த பிறகு போராட்டங்கள் தீவிரம் அடைந்து உள்ளது. 150-க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி, ஆர்ப்பாட்டம் போன்றவை நடந்து வருகிறது.

    இந்த போராட்டத்தை ஒடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

    போராட்டம் நடத்தும் பெண்கள் ஹிஜாப் உடைகளை தீ வைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். தொடர் போராட்டத்தால் ஈரானில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதுவரை போராட்டக்காரர்கள்- போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 92 பேர் இறந்துவிட்டதாக ஈரான் மனித உரிமை குழு தெரிவித்து உள்ளது. இதில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஈரான்- ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் 41 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது.

    போராட்டம் மேலும் தீவிரமடையாமல் தடுக்க ஈரானில் சமூக வலை தளங்கள் முடக்கப்பட்டு உள்ளது.

    ×