என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஸ்ரீமுஷ்ணம் தகராறு
நீங்கள் தேடியது "ஸ்ரீமுஷ்ணம் தகராறு"
ஸ்ரீமுஷ்ணம் அருகே குழந்தை இல்லாத விரக்தியில் மனைவி மீது தாக்குதல் நடத்திய கணவனை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள அழகாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 38) தொழிலாளி. இவரது மனைவி சரளா(32). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. ஆறுமுகம் தனது மனைவியுடன் வடக்கு பாளையங்கோட்டையில் உள்ள மாமனார் வீட்டில் வசித்து வந்தார்.
குழந்தை இல்லாத விரக்தியில் ஆறுமுகம் தனது மனைவி சரளாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு அவர்களுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஆறுமுகம் ஆத்திரம் அடைந்து சரளாவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் சரளா பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரளாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சோழத்தரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தார்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள அழகாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 38) தொழிலாளி. இவரது மனைவி சரளா(32). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. ஆறுமுகம் தனது மனைவியுடன் வடக்கு பாளையங்கோட்டையில் உள்ள மாமனார் வீட்டில் வசித்து வந்தார்.
குழந்தை இல்லாத விரக்தியில் ஆறுமுகம் தனது மனைவி சரளாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு அவர்களுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஆறுமுகம் ஆத்திரம் அடைந்து சரளாவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் சரளா பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரளாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சோழத்தரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X