search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷீலா ராஜ்குமார்"

    • நடிகை ஷீலா ராஜ்குமார் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

    வளர்ந்து வரும் நடிகையான ஷீலா ராஜ்குமார் தன் எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். பரத நாட்டிய கலைஞரான இவர் கூத்து பட்டறை நடத்தி வரும் தம்பி சோழன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் பல நாடகங்களில் நடித்துள்ளார்.


    ஷீலா, இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான 'ஆறாது சினம்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், 'டூ லெட்', 'திரெளபதி', 'மண்டேலா', 'நூடுல்ஸ்' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்தில் வெளியான 'கும்பளங்கி நைட்ஸ்' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஷீலா ராஜ்குமார் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.


    தம்பி சோழன் - ஷீலா ராஜ்குமார்

    இந்நிலையில், ஷீலா ராஜ்குமார் தனது திருமண உறவியில் இருந்து வெளியேறியுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள அவர், "திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன். நன்றியும் அன்பும்" என்று தனது கணவரின் கணக்கை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். எதனால் ஷீலா திருமண உறவில் இருந்து வெளியேறினார் என்பதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.


    • இயக்குனர் ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் ஷீலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தின் பூஜை இன்று தொடங்கியது.

    அறிமுக இயக்குனர் ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் 'மெட்ராஸ்' திரைப்படத்தில் ஜானியாக தோன்றி அனைவரையும் கவர்ந்த நடிகர் ஹரிகிருஷ்ணன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஷீலா ராஜ்குமார் நடிக்கிறார்.


    துவக்க விழா

    கோல்டன் சுரேஷ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு குமரன் ஒளிப்பதிவு செய்கிறார். வெங்கட் ரமணன் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சிவசங்கர் வசனம் எழுதுகிறார்.

    இந்தப்படத்தின் துவக்க விழா சென்னையில் இன்று (ஜூலை-6) நடைபெற்றது. இயக்குனர் பா.ரஞ்சித் இந்த துவக்க விழாவில் கலந்துகொண்டு இப்பட பணிகளை துவங்கி வைத்தார்.


    படக்குழு

    நடுத்தர வர்க்கத்தின் அன்றாட வாழ்கையில் நடக்கும் எதார்த்தமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிகழவிருக்கிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    ×