search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகுண்டசாமி"

    • கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
    • வருடந்தோறும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலை மைப்பதி அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த வருட வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கொடியேற்று நிகழ்ச்சியான இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், அதனைத்தொடர்ந்து கொடிபட்டத்துடன் அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகரா அரகரா என்ற கோஷத்துடன் தலைமைப்பதியை சுற்றிலும் வலம் வந்து 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    திருக்கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜ வேல், பையன் கிருஷ்ணராஜ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியறை பணிவிடை களை குருமார்கள் ஜனா.யுகேந்த், கிருஷ்ண நாமமணி ஆனந்த், ஜனா.வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்தி ருந்தனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    2-ம் நாள் இரவு அய்யா வைகுண்ட சுவாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 3-ம் நாள் விழாவில் அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் அய்யா வலம் வரும் நிகழ்ச்சி யும், 5-ம் நாள் பச்சை சாத்தி சப்பர வாகனத்தில் பவனி யும், 6-ம் நாள் கற்பக வாகன பவனியும், 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் வாகன பவனியும் நடைபெறுகிறது.

    வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி மாலை 8-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும், தொடர்ந்து அன்ன தானமும் நடைபெறு கிறது. 9-ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் இந்திர வாக னத்திலும், அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அடுத்த மாதம் 5-ந்தேதி 11-ம் திருவிழா நடைபெறு கிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறு கிறது.

    திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர் அற நெறி பரிபாலன அறக்கட்ட ளை சார்பில் தலைமை பதி வளாகத்தில் காலை, மதியம் இரவு என 3 வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • 24-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது
    • 11-ம் திருவிழாவான 3-ந்தேதி அய்யா தேரில் எழுந்தருளி பதியை சுற்றி வலம்வரும் தேரோட்ட நிகழ்ச்சி

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிஅருகே உள்ள முட்டப்பதியில் அய்யா வைகுண்டசாமி கோவில் உள்ளது.

    இது அய்யா வைகுண்ட சாமியின் பஞ்சபதிகளில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 11 நாட்கள் திருவிழா நடை பெறுவது வழக்கம். அதே போல இந்தஆண்டுக்கான பங்குனிதேரோட்டதிருவிழா வருகிற 24-ந்தேதிகொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்ததிருவிழாஅடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இதையொட்டி 1-ம் திருவிழாவான நாளை மறுநாள் (24-ந்தேதி) அதிகாலை 5.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. பகல் 11.30 மணிக்கு முட்டப்பதி திருபாற் கடலில்அய்யாவழிபக்தர் கள்தீர்த்த மாடி பதமிடும் நிகழ்ச்சி நடக்கிறது.பின்னர் உச்சிப்படிப்பு, அன்னதர்மம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கி றது. இரவு 7.30 மணி க்குஅய்யா கருட வாகனத் தில்எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதா ளங்கள் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    2-ம் திருவிழாவான 25-ந்தேதி முதல் 7-ம் திருவிழாவான 30-ந்தேதி வரை தினமும் பணிவிடைகள், உச்சிப்படிப்பு, தர்மங்கள் மற்றும் இரவு வாகன பவனி போன்றவை நடக்கிறது. 2 மற்றும் 3-ம் திருவிழா அன்று இரவு7-30 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் 4 மற்றும்5-ம்திருவிழா அன்று இரவு 7-30மணிக்கு அன்ன வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சியும் 6-ம் திருவிழா அன்று இரவு 7-30 மணிக்கு சர்ப்ப வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சியும் 7-ம் திருவிழாஅன்றுஇரவு7-30 அய்யா கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    8-ம் திருவிழா வான 31-ந்தேதி இரவு அய்யா வைகுண்டசாமி முட்டப்பதி கடலில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி அன்றுஅதிகாலை 4 மணி க்கு அய்யாவுக்கு பணிவிடையும் அதைத்தொடர்ந்து உகப்ப டிப்பும் நடக்கிறது. பகல் 12மணிக்குஉச்சிப்படிப்பு, பால்அன்னதர்மம் போன்றவை நடக்கிறது. இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு ஒற்றையால்விளை, மாதவபுரம் வழியாக முட்டப்பதி வரை பவனி வந்து வடக்கு வாசலுக்கு எதிரே அமைந்துஉள்ள கடலில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.இரவு 11 மணிக்குஅன்னதர்மம் நிகழ்ச்சி நடக்கிறது.

    9 மற்றும் 10-ம் திருவிழா வான அடுத்த மாதம் (ஏப்ரல்) 1 மற்றும் 2-ந்தேதிகளில் இரவு7-30மணிக்கு சப்பர வாகனத்தில் அய்யா எழுந் தருளி கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.11-ம் திருவிழாவான 3-ந்தேதி பகல் 12 மணிக்கு அய்யா தேரில் எழுந்தருளி பதியை சுற்றி வலம்வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் (4-ந்தேதி) அதிகாலை ௪ மணிக்கு திருக்கொடி இறக்க நிகழ்ச்சியும்தான தர்மங்களும்நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை முட்டப்பதி தலைமை தர்மகர்த்தாஆர்.பாலசுந்தர ம், தர்மகர்த்தா ஆர்.செல்வராஜன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • தைத்திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தேரோட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தைத்திருவிழா கடந்த 20-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி யது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது.

    விழாவின் 8-வது நாளில் அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 9 மற்றும் 10-ம் திருவிழாக்களில் இரவு வாகன பவனியும் தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. விழாவின் 11-ம் நாளான இன்று மதியம் 12 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

    தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அதி காலை 5 மணிக்கு அய்யா வுக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து யுகப்படிப்பும் நடந்தது. பகல் 11 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல்லக்கு வாகனத்தில் தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது.

    தேரோட்ட நிகழ்ச்சிக்கு தலைமை பதி குரு பால ஜனாதிபதி தலைமை தாங்கி னார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ண ராஜ், பையன் கிருஷ்ண நாம மணி, பையன் ஆனந்த், ஜனா யுகேந்த்,ஜனா வைகுந்த், நேம்ரிஷ்,பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அய்யா வழி பக்தர்கள் "அய்யா சிவ சிவ அரகரா அரகரா" பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முத்து குடைகளும், மேள தாளங்களும் முன்செல்ல தேரோட்டம் தொடங்கியது.

    தலைமைப்பதி முன்பு இருந்து புறப்பட்ட தேர் கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமை பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. வடக்கு வாசல் பகுதியில் அய்யாவழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவை அடங்கிய பொருட்களை சுருளாக படைத்து வழிபடுவதற்காக நீண்ட வரிசையில் காத்தி ருந்தனர். அங்கு பக்தர் களின் சுருள் ஏற்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குதலும் நடைபெற்றது. பின்னர் இன்று மாலை 6 மணியளவில் தேர் நிலைக்கு வந்தடைகிறது. தேரோட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி ரிஷப வாகனத்தில் தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடை பெறும்.

    • சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது.
    • திருவிழா நாட்களில் காலை, மதியம், இரவு நேரங்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி முன்பு அன்னதானம் நடைபெற்றது

    நாகர்கோவில்:

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது.

    11-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், காலை 11 மணிக்கு அய்யா பச்சை பல்லக்கு வாகனத்தில் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வைகுண்டசாமி எழுந்தருள தேரோட்டம் தொடங்கியது. தேரோட்ட பணிவிடைகளை குரு பால ஜனாதிபதி நிகழ்த்தினார். குருமார்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஆனந்த் ஆகியோர் பள்ளி அலங்கார பணிவிடைகளை செய்திருந்தனர்.

    பள்ளியறை பணி விடைகளை குருமார்கள் ஜனாயுகேந்த், ஜனாவை குந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்திருந்தனர். தலைப்பாகை அணிந்து காவியுடை தரித்த அய்யா வழி பக்தர்கள் 'அய்யா சிவசிவா அரகரா' என்ற பக்தி கோ‌ஷத்திற்கிடையே தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    தேர் கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாக மாலை 3 மணிக்கு வடக்கு ரதவீதியில் உள்ள வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது.வடக்கு வாசலில் அய்யா வழி பக்தர்கள் பூ, பழம், பன்னீர், தேங்காய், போன்றவற்றை சுருள்களாக வைத்து வழிபட்டனர். மாலை 6 மணிக்கு திருத்தேர் நிலைக்கு வருகிறது.

    இரவு 7 மணிக்கு ரி‌ஷப வாகனத்தில் அய்யா வைகுண்டசாமி தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.

    தேரோட்ட நிகழ்ச்சியில் குமரி, தூத்துக்குடி, நெல்லை உட்பட பல மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அய்யாவழி பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து கொடியிறக்கமும் நடை பெறுகிறது.

    திருவிழா நாட்களில் காலை, மதியம், இரவு நேரங்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி முன்பு அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜன், பால்மணி, ராஜலட்சுமி, சத்தியசேகர், ராதாகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது

    நாகர்கோவில்:

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணி விடையும், 4.30 மணிக்கு கலி வேட்டைக்கு அய்யா புறப் படும் நிகழ்ச்சியும் நடைபெற் றது. 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாக னத்தில் அய்யா வீற்றிருக்க தலைமைப்பதியில் நான்கு ரதவீதிகளையும் வாக னம் சுற்றி வந்தது. இரவு 7 மணிக்கு குதிரை வாகனம் முத்திரி கிணற்றங்கரையை சென்றடைந்தது.

    அங்கு தலைப்பாகை அணிந்து திருநாமம் தரித்து காவி உடை அணிந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் முன்னிலையில் அய்யா கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. கலி வேட் டையாடும் பணிவிடைகளை குரு பாலஜனாதிபதி நிகழ்த்தினார். கலி வேட்டை நிகழ்ச்சியில் நெல்லை, தூத்துக்குடி, சென்னை மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    குருமார்கள் பால லோகா திபதி, பையன் கிருஷ்ணராஜ், ஆனந்த் ஆகியோர் வாகன பவனி பணிவிடைகளையும், பள்ளி யறை பணிவிடைகளை குருமார்கள் ஜனாயுகேந்த், ஜனாவைகுந்த், நேம்ரிஷ் ஆகியோரும் செய்தி ருந்தனர். பின்னர் பக்தர்க ளுக்கு திருப்பதம் வழங்கி சுற்றுப்பகுதி ஊர்க ளான செட்டிவிளை, சாஸ் தான் கோவில் விளை, கோட்க டையடி புதூர், சோட்டப்ப ணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக வாகனம் பவனி வந்தது. அப்போது கிராம மக்கள் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனர்.

    பல கிராமங்களை சுற்றி வந்த வாகனம் நள்ளிரவு 12 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலுக்கு வந்தது. அங்கு அய்யா வைகுண்ட சாமி பக்தர்களுக்கு தவக்கோ லத்தில் காட்சியளித்தார். பின்னர் பணிவிடையும், பெரியயுகப்படிப்பும், வடக்கு வாசலில் அன்ன தர்மமும் நடந்தது.

    நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டம் அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    ×