என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வேளாண் இடுபொருட்கள்"
- வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அனுகி பயனடையலாம்
- வேளாண்மை அதிகாரி தகவல்
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் பாணாவரம் துணை வேளாண்மை விரிவாக்க மையம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயிர் பாதுகாப்பை மேற்கொள்ள ரூ.2000 மானியத்தில் விசைத்தெளிப்பான்கள் வழங்கப்படுகிறது.
மேலும் இத்திட்டத்தில் உயிர் உரங்களான அசோஸ்பை ரில்லம்,பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஸ் பாக்டீரியா மற்றும் அசோபாஸ் திரவ உயிர் உரங்கள் 50 சதவிகிதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
இது தவிர மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பண்ணை எந்திர தொகுப்பு (கடப்பாரை, மண்வெட்டி, தாலா,அரிவாள் . களைக்கொத்தி) 50 சதவிகிதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. நிலக்கடலை பயிருக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஜிப்சம் மூட்டை ரூ.108 விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இத்திட்டத்தில் கீழ் பேட்டரியில் இயங்கும் விசைத்தெளிப்பான்கள் ரூ.2000 மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அனுகி பயனடையலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.
- 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது
- இணை இயக்குனர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக் குனர் பாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கந்திலி மற்றும் திருப்பத்தூர் வட்டாரங்களில் விவசாயிகளுக்கு தேவையான தார்பா லின்கள், தெளிப்பான்கள், கடப்பாரை, மண்வெட்டி, அரிவாள், களைக்கொத்து, இரும்பு சட்டியுடன் பண்ணைக்கருவிகள் தொகுப்பு, ஜிப்சம், ஜிங்க் சல்பேட், உயிர் உரங்கள், நுண்ணூட்டக்க லவை, பயிர்பாதுகாப்பு மருந் துகள், தென்னைக்கு இ L வேண்டிய போராக்ஸ், தக் கைப்பூண்டு விதைகள், உளுந்து விதைகள், காராமணி விதைகள் ஆகியவை மாநில வேளாண்மை வளர்ச்சித்திட் டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் வினியோகம் செய்யப் பட்டு வருகின்றது. சம்பா பருவ நெல் அறுடைக்குப்பின் பயறு வகைப் பயிர்கள் சாகு படி செய்யும் பொருட்டு உளுந்து விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றது.
தென்னையில் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த உயிரியல் பூஞ்சாணக் கொல்லி மருந்து மற்றும் இனக்கவர்ச்சிப் பொறிகள் மானியத்தில் வழங்கப்படுகின்றன. மேலும், டி.கே.எம். 13, கோ 51 ஆகிய நெல் ரகங்களும், கேழ்வரகு விதைகளும் மானி யத்தில் வழங்கப்படுகின்றன.
தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்தும், தங்கள் பகுதி உதவிவேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டும் பயனடையலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்