search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேப்பம்பட்டு"

    • வேப்பம்பட்டு-பெருமாள்பட்டு இடையே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்தபோது தந்தை மற்றும் 2 மகள்கள் ரெயில் மோதி பலியானார்கள்.

    வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே வேப்பம்பட்டு-பெருமாள்பட்டு இடையே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணி முழுமை அடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்தபோது தந்தை மற்றும் 2 மகள்கள் ரெயில் மோதி பலியானார்கள்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதியில் நிற்கும் மேம்பால பணியை விரைந்து முடிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ரெயில்வே மேம்பாலப்பணியை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்றது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பணியை முடிக்க கூடுதலாக ரூ.24 கோடி 18 லட்சத்து 83 ஆயிரத்து 895 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் வேப்பம்பட்டு ரெயில் நிலைய மேம்பாலம் கட்டும் பணி இன்று பூமி பூஜையுடன் மீண்டும் தொடங்கியது. இதில் பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ரெயில்வே கேட்டை மூடமுடியாத நிலையும் உருவானது.
    • சென்னையில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ளது வேப்பம்பட்டு ரெயில் நிலையம். இதன் அருகே ரெயில்வே கேட் உள்ளது.

    இன்று காலை 9.30 மணியளவில் வேப்பம்பட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி திறந்து இருந்த இந்த ரெயில்வேகேட்டை தாண்டி செல்ல முயன்றது.

    ரெயில்வே கேட்டில் தண்டவாளப்பகுதியில் சென்ற போது திடீரென லாரி பழுதாகி நின்றது. லாரியை மேலும் இயக்க முடியாததால் தண்டவாளத்திலேயே நின்றது.

    இதனால் அவ்வழியே மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ரெயில்வே கேட்டை மூடமுடியாத நிலையும் உருவானது.

    தொடர்ந்து சென்னைகடற்கரை-திருவள்ளூர் மற்றும் திருவள்ளூர்-சென்னை கடற்கரை மார்க்கத்தில் ரெயில்கள் வந்து கொண்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அனைத்து மின்சார ரெயில்கள் மற்றும் சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சென்னையில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதனை அங்கிருந்து அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ரெயில்வே தண்டவாளத்தில் இருந்த லாரியை தள்ளி வெளியேற்றினர். இதன் பின்னரே ரெயில்வே அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து காலை 10 மணிக்கு பின்னர் ரெயில் சேவை சீரானது. இதனால் ரெயில்பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ரெயில்வே கேட்டில் லாரி பழுதாகி நின்றதும் உடனடியாக ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ×