search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளம் அபாயம்"

    • சாத்தனூர்அணைக்கு நீர்வரத்துஅதிகரித்துள்ளது.
    • தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்குஏற்படும் அபாயம்ஏற்பட்டுள்ளது.

    கடலூர்:

    தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர்அணைக்கு நீர்வரத்துஅதிகரித்துள்ளது. இதனால் சாத்தனூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.சாத்தனூர் அணையில் நீர் வரத்து தொடங்கியதால் கடலூர் மாவட்டம்ப ண்ருட்டிஎனதிரிமங்கலம், கண்டரக்கோட்டை பகுதியில் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்குஏற்படும் அபாயம்ஏற்பட்டுள்ளது. இந்தஅணையின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஏரிகளும் நீர் ஆதாரம் கிடைப்பதோடு 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற்று வருகின்றன.

    மேலும் பல்வேறு பகுதி்களுக்கு சாத்தனூர்அணையின் மூலம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணை வேகமாக நிரம்பி வருவதால் முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சாத்தனூர் அணையை நம்பி உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்பெண்ணைஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ள தால்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ருட்டி தாசில்தார் சிவா. கார்த்திகேயன் நேரில்பார்வையிட்டுஆய்வுசெய்தார் தென்னை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது எனவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரும் பெண்ணை ஆற்று நீரில் இறங்கி குளிக்கவும் செல்பி எடுக்கவோ கூடாது என அறிவித்துள்ளனர்.

    ×