search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடி"

    • கொத்துக் கொத்தாக பல்லாயிரக்கணக்கான வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றது.
    • வெடிசத்தம் இல்லாத அமைதியான தீபாவளியை அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் சில கிராமங்களில் பாலூட்டி வகையை சேர்ந்த பறக்கவல்ல விலங்கான வவ்வால்களுக்காக வெடிசத்தம் இல்லாத அமைதியான தீபாவளியை அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

    காரிமங்கலம் அருகே பல்லேனஅள்ளி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஏரி கரையில் உள்ள முனியப்பன் கோயிலை சுற்றி மிகவும் பழமை வாய்ந்த பெரிய, பெரிய மரங்கள் அமைந்துள்ளன. இங்கு மரக் கிளைகளில் கொத்துக் கொத்தாக பல்லாயிரக்கணக்கான வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றது.

    இந்த மரத்தில் உள்ள வவ்வால்கள், இரவு நேரங்களில் இரைதேடி காட்டுக்கு சென்று, பின் விடியற்காலையில் ஓய்விற்காக இந்த மரங்களை வந்தடைகிறது. தீபாவளி பண்டிகையின்போது வெடிச்சத்தங்களுக்கு பஞ்சமில்லாமல் ஆனந்தமாக கொண்டாடப்படும் நேரத்தில், இப்பகுதி மக்கள் வவ்வால்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் வெடிச்சத்தமின்றி அமைதியான முறையில் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

    இந்த பகுதியில் வவ்வால்கள் இருப்பதால் கிராமத்திற்கும் மக்களுக்கும் பாதுகாப்பு என கருதி, இந்த பகுதிகளில் எந்தவித வெடிச்சத்தத்தையும், இக்குங்குள்ள மக்கள் எழுப்புவதில்லை.

    மேலும் இந்த மரங்களில் உள்ள வவ்வால்களை பாதுகாத்தும் வருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள மக்கள் வவ்வால்களை கடவுளாகவும், நோய் தீர்க்கும் பாலூட்டியாகவும் வணங்கி வருகின்றனர். வவ்வால்கள் குடியிருக்கும் மரங்களுக்கு கீழ் உள்ள முனியப்பன் கோயிலில் திருவிழா நடந்தால் கூட, பம்பை உள்ளிட்ட வாக்கியங்களை அடிப்பதில்லை, வெடி வெடிப்பதில்லை.

    மேலும் இங்குள்ள தெய்வங்களோடு இந்த வவ்வால்களையும் இணைத்து தொன்றுதொட்டு வழிபட்டு வருகின்றனர். மூன்று தலைமுறைகளாக வவ்வால்களை கிராமத்து மக்கள் பாதுகாத்து வருவதால் கிராமத்தில் உள்ள குடும்பத்தினர் நல்ல முறையில் வளர்ச்சியடைந்து வருகின்றனர். மேலும் குழந்தை பேறு இல்லை என்பதற்கே, இடமில்லை. குழந்தை இல்லை என்று வேண்டிய ஒரு சிலருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கின்றன என்றும் இதனால் தலைமுறை தலைமுறையாக இந்த கிராம மக்கள் வவ்வால்களை பாதுக்காப்பதற்காக இந்த கிராமத்தில் தீபாவளி மற்றும் விசேஷ நாட்களில் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை தியாகம் செய்து வருவதாக தெரிவித்தனர்.

    • கியாஸ் சிலிண்டர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
    • டீக்கடையில் கடந்த 17-ந் தேதி கியாஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பெருவிளை பகுதியை சேர்ந்தவர் சபிக்.இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் டீக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது டீக்கடையில் கடந்த 17-ந் தேதி கியாஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடை ஊழியர்கள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.8 பேரும் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சையில் இருந்த சசிதரன், சுப்பையா ஆகிய இருவர் பலியானார்கள். 

    மீதமுள்ள 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பள்ளிவிளையை சேர்ந்த பிரவீன் (வயது 25) என்பவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரவீன் நேற்று சிகிச்சை பலன்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கியாஸ் சிலிண்டர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

    ×