search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்கடாம்பட்டி"

    • கோவிலூற்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள் உள்ளிட்டோருக்கு மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • மருத்துவர் பாண்டியராஜன், செவிலியர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சைகள் அளித்தனர்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி ஊராட்சி கோவிலூற்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோர்களுக்கான மருத்துவ சிகிச்சை முகாம் ஊராட்சிமன்ற தலைவர் சாருகலா ரவி தலைமையில் நடைபெற்றது.

    ஊராட்சிமன்ற துணைத் தலைவர் சித்ரா பாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் அரசு மருத்துவர் பாண்டியராஜன் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சைகள் அளித்தனர்.

    • மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா ரவி தலைமை தாங்கினார்.
    • பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி நெல்லையப்பபுரத்தில் இலவச மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா ரவி தலைமையில் ஊராட்சி மன்ற துணை தலைவர் சித்ரா பாபு முன்னிலையில் நடைபெற்றது.

    முகாமில் தென்காசி மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் முரளி சங்கர் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். மேலும் நெல்லையப்பபுரம் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் பழனிகுமார், வட்டார மேற்பார்வையாளர் ஆனந்தன், சுகாதார ஆய்வாளர் சண்முகம், நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் முகமது முபாரக் மற்றும் செவிலியர்கள், பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டனர். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×