search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிபலி"

    • சசிகுமார் (வயது 50) விவசாயி.இவர் காங்கேயனூர் பகுதியிலுள்ள இவரது விவசாய நிலத்திற்கு சென்றார். அங்கு விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள நெல்லிற்க்கு தண்ணீர் பாய்ச்ச மின் மோட்டாரை இயக்கினார்.
    • அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பலியானார்

    விழுப்புரம் :

    விழுப்புரம் மாம்பழப்பட்டு அருகே காங்கேயனூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 50) விவசாயி.இவர் அதே பகுதியில் உள்ள இவரது விவசாய நிலத்திற்கு சென்றார். அங்கு விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள நெல்லிற்க்கு தண்ணீர் பாய்ச்ச மின் மோட்டாரை இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பலியானார். அங்கு வந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காணை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×