search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி கடத்தல்"

    ஒட்டன்சத்திரம் அருகே மணல் திருட்டு குறித்து புகார் அளித்த விவசாயி கடத்தப்பட்டரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மார்க்கம்பட்டி துரையூரைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 48). விவசாயி. இவர் அந்த பகுதியில் நடந்த மணல் திருட்டுக்கு எதிராக அடிக்கடி மக்களை திரட்டி போராட்டம் நடத்தி வந்தார். மேலும் போலீஸ் நிலையத்திலும், வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்து வந்தார். இதனால் அவர் மீது மணல் கடத்தும் கும்பல் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.

    சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துச்சாமி திடீரென மாயமானார். இது குறித்து அவரது உறவினர் தங்கராஜ் மற்றும் பொதுமக்கள் இடையகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதில் மணல் திருட்டு தொடர்பாக தொடர்ந்து புகார் அளித்துமக்களை திரட்டி போராட்டம் நடத்தியதால் அவரை யாரேனும் கடத்தி வைத்திருக்க கூடும் என தெரிவித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துசாமியை தேடி வருகின்றனர்.

    ×