என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விளம்பர போர்டு"
- இரும்பிலான மின் கம்பத்தில் விளம்பர போர்டும் வைக்கப்பட்டு இருந்தது.
- எதிர்பாராதவிதமாக சிக்னல் மின்கம்பம் கார் மீது சாய்ந்து விழுந்தது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிபுலியூர் அண்ணா மேம்பாலம் சிக்னல் மின் கம்பம் உள்ளது. இரும்பிலான இந்த மின் கம்பத்தில் விளம்பர போர்டும் வைக்கப்பட்டு இருந்தது. இன்று நண்பகல் 12 மணி அளவில் கோண்டூரைசேர்ந்த முத்துவேல் என்பவர் காரில் அண்ணா மேம்பாலம் சிக்னல் பகுதியில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிக்னல் மின்கம்பம் கார் மீது சாய்ந்து விழுந்தது. இதனால் முத்துவேல் அதிர்ச்சிஅடைந்தார். உடனே காரை அவர் நிறுத்தினார்.இந்த இடம் வாகன போக்குவரத்துக்கு முக்கிய சந்திப்பு ஆகும்.
எனவே சிறிது நேரத்தில் ஏராளமான வாகனங்கள் அணி வகுத்து நின்றது. இதனால் ேபாக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விைரந்து சென்று போக்குவரத்தினை சரி செய்தனர். இந்த சிக்னல் மின்கம்பம் காரின் முன் பகுதியில் விழுந்ததால் முத்துவேல் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதுகுறித்து மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்கம்பம் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது இந்த மின் கம்பம் மண்ணுக்குள் புதைந்து இருந்ததால் துருப்பிடித்து இத்து போய் காணப்பட்டது. இதனால்தான் சிக்னல் மின் கம்பம் சாய்ந்து உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்