search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் இன்று பரபரப்பு கார் மீது சாய்ந்து விழுந்த சிக்னல் மின்கம்பம்
    X

    சாலையில் சாய்ந்து கிடக்கும் சிக்னல் மின் கம்பத்தை படத்தில் காணலாம்.

    கடலூரில் இன்று பரபரப்பு கார் மீது சாய்ந்து விழுந்த சிக்னல் மின்கம்பம்

    • இரும்பிலான மின் கம்பத்தில் விளம்பர போர்டும் வைக்கப்பட்டு இருந்தது.
    • எதிர்பாராதவிதமாக சிக்னல் மின்கம்பம் கார் மீது சாய்ந்து விழுந்தது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிபுலியூர் அண்ணா மேம்பாலம் சிக்னல் மின் கம்பம் உள்ளது. இரும்பிலான இந்த மின் கம்பத்தில் விளம்பர போர்டும் வைக்கப்பட்டு இருந்தது. இன்று நண்பகல் 12 மணி அளவில் கோண்டூரைசேர்ந்த முத்துவேல் என்பவர் காரில் அண்ணா மேம்பாலம் சிக்னல் பகுதியில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிக்னல் மின்கம்பம் கார் மீது சாய்ந்து விழுந்தது. இதனால் முத்துவேல் அதிர்ச்சிஅடைந்தார். உடனே காரை அவர் நிறுத்தினார்.இந்த இடம் வாகன போக்குவரத்துக்கு முக்கிய சந்திப்பு ஆகும்.

    எனவே சிறிது நேரத்தில் ஏராளமான வாகனங்கள் அணி வகுத்து நின்றது. இதனால் ேபாக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விைரந்து சென்று போக்குவரத்தினை சரி செய்தனர். இந்த சிக்னல் மின்கம்பம் காரின் முன் பகுதியில் விழுந்ததால் முத்துவேல் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதுகுறித்து மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்கம்பம் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது இந்த மின் கம்பம் மண்ணுக்குள் புதைந்து இருந்ததால் துருப்பிடித்து இத்து போய் காணப்பட்டது. இதனால்தான் சிக்னல் மின் கம்பம் சாய்ந்து உள்ளது.

    Next Story
    ×