search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலங்குகள் மீட்பு"

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் கால்நடைகளை கடத்தும் கும்பலை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து கால்நடைகளை மீட்டனர்.
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு சட்டவிரோதமாக கால்நடைகளை சிலர் ஏற்றி செல்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பூஞ்ச் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினர்.

    இதில், 5 வாகனங்களில் சட்டவிரோதமாக கால்நடைகள் கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த  வாகனங்களில் ஏற்றப்பட்டிருந்த 50 கால்நடைகளை மீட்ட போலீசார், கால்நடைகளை கடத்தி வந்த வாகன ஓட்டிகள் 5 பேரையும் கைது செய்தனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் ஜம்மு மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் 4 வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையின்போது, போதை மருந்து விற்பனை செய்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×