search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருதுக்கு விண்ணப்பம்"

    • மஞ்சப்பை-பசுமை சாம்பியன் விருதுக்கு பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    "மீண்டும் மஞ்சப்பை" பிரசாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் (SUP) தடையை திறம்பட செயல்படுத்தும் தலா 3 சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மாநில அளவில் மஞ்சப்பை விருதுகள்" வழங்கப்படும் என அறிவித்தார்.

    அதேபோல் தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர்கள்/அமைப்புகளுக்கு ''பசுமை சாம்பியன் விருது'' 100 பேருக்கு தலா ரூ.1 லட்சம்வீதம் பணமுடிப்பும் வழங்கப்பட உள்ளது.இந்த 100 விருதுகளில் விருதுநகர் மாவட்டத்திற்கு 3 விருதுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பசுமை சாம்பியன் விருதுக்கான விண்ணப்பங்கள் 15.4.2023 வரையிலும், மஞ்சப்பை விருதுக்கான விண்ண ப்பங்கள் 1.5.2023 வரையிலும் சமர்பிக்கலாம்.

    விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள்/தனிநபர்கள்/அமைப்புகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

    மஞ்சப்பை மற்றும் பசுமை சாம்பியன் விருதிற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளமான (https://virudhunagar.nic.in.) மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய இணைய தளமான (www.tnpcb.gov.in)-ல் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அலுவலக வேலைநாட்களில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், விருதுநகர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் தகவல்
    • 28-ந் தேதி கடைசி நாள்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் திருநங்கையர்களை ஊக்குவிக்கும் முன்மாதிரி விருதானது ரூ.1,00,000/- காசோலை மற்றும் சான்று ஆகியவற்றுடன் வழங்கப்பட்டு வருகிறது.

    விருது

    இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (awards.tn.gov.in) பதிவு செய்யப்பட்டுள்ளது.விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் - 28.02.2023, அதற்கான தகுதிகள்:-

    திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும்.திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

    மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின் படி உரிய முறையில் இணையதளம் மூலமாகப் பெறப்படும் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • கலெக்டர் தகவல்
    • 15 பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்படுகிறது

    ராணிப்பேட்டை:

    சுற்றுலாத்துறை தமிழ்நாடு சார்பில் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர் களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுலா தினத்தன்று சுற்றுலா விருதுகள் வழங்க உள்ளது.

    இந்த ஆண்டு விருது வழங்குவதற்கான அறிவிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது.

    அதன்படிசுற்றுலா ஆபரேட்டர்கள் , விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உள் ளிட்ட 15 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

    எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் நாளைக்குள் ( வெள்ளிக்கிழமை ) விண்ணப் பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    உலக சுற்றுலா தின மான 27.9.22 அன்று விருது வழங்கப்படும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    ×