என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
- கலெக்டர் தகவல்
- 15 பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்படுகிறது
ராணிப்பேட்டை:
சுற்றுலாத்துறை தமிழ்நாடு சார்பில் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர் களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுலா தினத்தன்று சுற்றுலா விருதுகள் வழங்க உள்ளது.
இந்த ஆண்டு விருது வழங்குவதற்கான அறிவிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படிசுற்றுலா ஆபரேட்டர்கள் , விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உள் ளிட்ட 15 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் நாளைக்குள் ( வெள்ளிக்கிழமை ) விண்ணப் பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உலக சுற்றுலா தின மான 27.9.22 அன்று விருது வழங்கப்படும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Next Story






