search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநங்கையர் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பம்
    X

    திருநங்கையர் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பம்

    • கலெக்டர் தகவல்
    • 28-ந் தேதி கடைசி நாள்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் திருநங்கையர்களை ஊக்குவிக்கும் முன்மாதிரி விருதானது ரூ.1,00,000/- காசோலை மற்றும் சான்று ஆகியவற்றுடன் வழங்கப்பட்டு வருகிறது.

    விருது

    இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (awards.tn.gov.in) பதிவு செய்யப்பட்டுள்ளது.விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் - 28.02.2023, அதற்கான தகுதிகள்:-

    திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும்.திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

    மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின் படி உரிய முறையில் இணையதளம் மூலமாகப் பெறப்படும் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×