search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபருக்கு சிறை"

    • சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • இதுகுறித்து சிறார் பாலியல் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மைக்குடியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 27). இவர் கடந்த 2019-ம் ஆண்டு 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக திருமங்கலம் தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சிறார் பாலியல் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் மதுரம் விசாரித்து வந்தார்.

    விசாரணை முடிவடைந்த நிலையில், முத்துக்குமாருக்கு 10ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீஸ் ஏட்டு வெங்கடேஷ் ஆகியோருக்கு போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் பாராட்டு தெரிவித்தார்.

    • திருக்கழுகுன்றம் அடுத்த அமிஞ்சகரை கோவில் திருவிழாவில் கையில் பட்டாக்கத்தி ஒன்றை வைத்துக் கொண்டு வாலிபர் பக்தர்களை மிரட்டியுள்ளார்.
    • பொது இடத்தில் பட்டாக்கத்தி வைத்து பொது மக்களை மிரட்டியதாக அவர்மீது திருக்கழுகுன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அருகே உள்ள நல்லாத்தூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் திவ்யராஜ் (வயது 22). இவர் திருக்கழுகுன்றம் அடுத்த அமிஞ்சகரை கோவில் திருவிழாவில் கையில் பட்டாக்கத்தி ஒன்றை வைத்துக் கொண்டு பக்தர்களை மிரட்டியுள்ளார்.

    தகவலறிந்த திருக்கழுகுன்றம் போலீசார் திவ்யராஜை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்த போது போலீசாரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. பொது இடத்தில் பட்டாக்கத்தி வைத்து பொது மக்களை மிரட்டியதாக அவர்மீது திருக்கழுகுன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    ×