search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
    X

    சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை

    • சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • இதுகுறித்து சிறார் பாலியல் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மைக்குடியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 27). இவர் கடந்த 2019-ம் ஆண்டு 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக திருமங்கலம் தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சிறார் பாலியல் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் மதுரம் விசாரித்து வந்தார்.

    விசாரணை முடிவடைந்த நிலையில், முத்துக்குமாருக்கு 10ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீஸ் ஏட்டு வெங்கடேஷ் ஆகியோருக்கு போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் பாராட்டு தெரிவித்தார்.

    Next Story
    ×