search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாரச்சந்தையில்"

    • வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது
    • தீபாவளி பண்டிகையைெயாட்டி

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் வாராவாரம் வியாழன் தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கமாகும்.

    தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டதை ஒட்டி நேற்று ஆலங்குடி சந்தை கூடியது. அதன்படி சந்தையில் காய்கறிகள், வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும கோழி உள்ளிட்டவற்றை வாங்க பொதுமக்கள் முண்டி அடித்தனர்.

    தீபாவளிப் பலகாரங்களுக்குத் தேவையான மாவு, மளிகைப் பொரு ட்கள் காய்கறிகள் என அனைத்து பொருட்களும் அமோகமாக விற்ப னை ஆனதால் வியாபாரிகளும் உற்சாகத்துடன் வியாபாரம் செய்தனர்.

    மாலை வேலையில் சாரல் மழை வந்ததால் வியாபாரம் சற்று மந்த மாகி இருந்தாலும், இந்த வாரம் ஆலங்குடி சந்தையில் கடுமையான வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக் கின்றனர்.

    • விவசாயிகள் மட்டு மின்றி, விவசாய கூலித் தொழிலாளர்களும், கணிசமான வருவாய் ஈட்டிக்கொடுக்கும் வெள்ளாடு, செம்மறியாடு, வளர்ப்பை உபதொழிலாக செய்து வருகின்றனர்.
    • இதனால், வாரந்தோறும் ரூ. 30 முதல் ரூ.50 லட்சம் வரை ஆடுகள் விற்பனை வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி,பேளூர், அயோத்தியாபட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதி கிராம விவசாயிகள் மட்டுமின்றி, கல்வராயன் மலை, அருநூற்றுமலை, நெய்யமலை, சந்துமலை, ஜம்பூத்துமலை ஆகிய மலை கிராமங்களிலும் பெரும்பாலானோர் விவசாயத்தைமுக்கிய தொழிலாக கொண்டுள்ள னர். விவசாயிகள் மட்டு மின்றி, விவசாய கூலித் தொழிலாளர்களும், கணிசமான வருவாய் ஈட்டிக்கொடுக்கும் வெள்ளாடு, செம்மறியாடு, வளர்ப்பை உபதொழிலாக செய்து வருகின்றனர்.

    வாழப்பாடி அடுத்த பேளூரில், 50 ஆண்டுக்கும் மேலாக திங்கட்கிழமை தோறும் ஆடுகள் விற்பனைக்கான வாரச்சந்தை கூடிவருகிறது. இதனால், மாவட்ட அளவில் ஆடுகள் வளர்ப்பு தொழிலில் வாழப்பாடி பகுதி கிராமங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

    பேளூர் சந்தைக்கு வாரந்தோறும் வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட பல்வேறு இன ஆடுகள் 500 முதல் 800 வரை விற்பனைக்கு வருகின்றன. தீபாவளி, பொங்கல்,

    ஆடி-18, ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வருகின்றன.

    வாழப்பாடியையொட்டி நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் தர்மபுரி மாவட்ட எல்லையிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவ சாயிகளும், வியாபாரிகளும், நுகர்வோர்களும், இந்த சந்தையில் கூடுகின்றனர்.

    இதனால், வாரந்தோறும் ரூ. 30 முதல் ரூ.50 லட்சம் வரை ஆடுகள் விற்பனை வர்த்தகம் நடைபெற்று வருகிறது. வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் பகுதி கிராமங்களில்,

    ஆடி-18 பண்டிகையை, அசைவ விருந்தோடு, பொதுமக்கள் வெகு விமரி சையாக கொண்டாடுவது வழக்கம்.

    நாளை மறுநாள்( புதன்கிழமை) ஆடி-18 பண்டிகை என்பதால், இன்று காலை பேளூரில் கூடிய ஆட்டுச்சந்தைக்கு ஆடுகள் கொள்முதல் செய்ய பல்வேறு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் வந்திருந்தனர்.

    நூற்றுக்கணக்கான விவசாயிகளும் வியாபாரி களும் ஆடுகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்த னர். ஆடிப் பண்டிகை விருந்துக்காக போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை கொள்முதல் செய்ததால், ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு, ஒரு ஆட்டிற்கு ரூ.ஆயிரம் வரை விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைத்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் வரை ரூ.9,000 வரை விலைபோன ஒரு ஆட்டுக்கிடா இந்த வாரம் ரூ.10,000 வரை விலை போனது. கூடுதல் விலை கொடுத்து இறைச்சி வியாபாரிகளும், பொதுமக்களும் ஆடுகளை கொள்முதல் செய்தனர்.

    ×