search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வான் டெர் டுசன்"

    • இந்தியாவில் இந்தியாவை எதிர்த்து விளையாடும்போது நெருக்கடி இருக்கும்
    • உலகக் கோப்பையாக இருந்தாலும், எங்களது அணுகுமுறையில் வேறுபாடு இருக்காது

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியா தோல்வியை சந்திக்காமல் உள்ளது. தென்ஆப்பிரிக்கா நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஆனால், நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற அணிகளை பந்தாடியது.

    இந்தியாவை வருகிற 5-ந்தேதி தென்ஆப்பிரிக்கா எதிர்கொள்கிறது. இதில் வெற்றிபெறும் அணி புள்ளிகள் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும். மேலும், இந்த உலகக் கோப்பையில் இது மிகப்பெரிய போட்டியாக அமையும் என்றால் அது மிகையாகாது.

    தென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங்கிற்கு வான் டெர் டுசன் முக்கிய பங்காற்றி வருகிறார். நேற்று நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசினார்.

    இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து வான் டெர் டுசன் கூறியதாவது:-

    உண்மையிலேயே, இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது மிகப்பெரிய போட்டியாக இருக்கும். அவர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அவர்கள் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய அணியாக திகழ்கின்றனர். சூப்பர் பவுலிங். அதுபோல் உண்மையிலேயே பேட்டிங் சூப்பர்.

    ஆனால் நாம் செய்ய விரும்பும் விசயங்களைச் சிறப்பாகச் செய்தால், மிகவும் வலுவான நிலையில் இருப்போம் என்பதை அறிந்து அந்த விளையாட்டிற்குச் செல்வோம். நெருக்கடியின் கீழ் விளையாடுவது சவாலானது. அதைத்தான் செய்ய போகிறோம். ஆனால், இதற்கு முன் இந்தியாவில் இந்தியாவை எதிர்த்து விளையாடியுள்ளோம். அப்போது அவர்களை தோற்கடித்துள்ளோம்.

    இதனடிப்படையில் இது உலகக் கோப்பையாக இருந்தாலும் கூட, மிகப்பெரிய வித்தியாசம் இல்லை. நாங்கள் மிகப்பெரிய அளவில் இதை எதிர்பார்க்கவில்லை. இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு உள்ளோம். நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம், அதை எப்படி விளையாட விரும்புகிறோம் என்பதில் கவனம் செலுத்துகிறோம்.

    இவ்வாறு வான் டெர் டுசன் தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 333 ரன்களை குவித்தது.
    • தென் ஆப்பிரிக்காவின் நோர்ஜே 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

    செஸ்டர் லீ ஸ்ட்ரீட்:

    தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. வான் டெர் டுசன் சிறப்பாக ஆடி சதமடித்து 133 ரன்னில் அவுட்டானார். மார்கிரம் 77 ரன்னிலும், ஜேன்மன் மலான் 57 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதையடுத்து, 334 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய், பேர்ஸ்டோ சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தது. ராய் 43 ரன்னில் வெளியேறினார்.

    பேர்ஸ்டோவ் அரை சதமடித்து 63 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜோ ரூட் பொறுப்புடன் ஆடினார். அவருக்கு மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

    முதலில் நிதானமாக ஆடிய ஜோ ரூட் அரை சதமடித்தார். அதன்பின் அதிரடியாக ஆடினார். அவர் 86 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இங்கிலாந்து 46.5 ஓவரில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ஆன்ரிச் நோர்ஜே 4 விக்கெட்டும், ஷம்சி, மார்கிரம் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது வான் டெர் டுசனுக்கு அளிக்கப்பட்டது.

    ×