search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாணிஜெயராம்"

    • சகோதரியின் குடும்பத்தினர் வாணி ஜெயராமின் இறுதி சடங்குகளை நடத்தி வருகிறார்கள்.
    • வாணிஜெயராமின் இசைப் பணிகளை கவுரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டு உள்ளார்.

    சென்னை:

    பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேற்று இரவு முதல் அவரது இல்லத்திற்கு திரைஉலகினரும், அரசியல் கட்சி பிரமுகர்களும் வரத் தொடங்கினார்கள்.

    கவர்னர் ஆர்.என்.ரவி இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணி, பாடகி சித்ரா, மனோபாலா, இசை அமைப்பாளர்கள் தினா, கணேஷ், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    வாணி ஜெயராம் திருமணத்திற்கு பிறகு வாரிசுகள் இல்லாததால் ஜெயராம் மறைவுக்கு பிறகு, அவரது சகோதரி மட்டுமே துணையாக இருந்து வந்தார். தற்போது சகோதரியின் குடும்பத்தினர் வாணி ஜெயராமின் இறுதி சடங்குகளை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை அளிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணி பாடகி வாணிஜெயராம், இயற்கை எய்தியதை அடுத்து அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    வாணிஜெயராமின் இசைப் பணிகளை கவுரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டு உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பொதுமக்கள், திரையுலகினர் அஞ்சலிக்கு பிறகு வாணிஜெயராமின் உடல் இன்று பிற்பகலில் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்யப்படுகிறது. பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

    • குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • பழம்பெரும் பின்னணிப் பாடகியான வாணிஜெயராம் மறைவு, இசையுலகைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

    சென்னை:

    இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி வாணிஜெயராம் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி, கலைவாணி என்ற வாணிஜெயராம் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்து உலகம் முழுக்க தமது இன்னிசையின் இனிமையால் புகழ் பெற்றவர். தமிழ் உட்பட 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அழியாப் புகழ்பெற்ற பாடல்களைப் பாடி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர். அண்மையில் அவருக்கு 'பத்மபூஷண்' விருது அறிவிக்கப்பட்ட போது எனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தேன். அறிவிக்கப்பட்ட விருதைப் பெறும் முன்னரே அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது பெரும் துயரை அளிக்கும் செய்தியாகும்.

    பழம்பெரும் பின்னணிப் பாடகியான வாணிஜெயராம் மறைவு, இசையுலகைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். வாணிஜெயராமை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×