search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழங்கும் நிகழ்ச்சி"

    • கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுதல் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • ரூ.25.408 லட்சம் மதிப்பீட்டில் இருக்கைகள் மற்றும் மேசைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பெரிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டிட பணிகள் மற்றும் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.25.408 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி மாணவிகளுக்கான இருக்கைகள் மற்றும் மேசைகள் வழங்குதல் நிகழ்ச்சி மற்றும் புதிதாக கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுதல் பணிகளுக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம்,திருப்பூர் தெற்கு மாநகரச் செயலாளர் டிகேடி. நாகராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்எஸ்ஆர். ராஜ் கலந்து கொண்டனர்.

    ×