search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வணிகர்கள் மாநாடு"

    • மாநாட்டில் முக்கியமான ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
    • சாமானிய வணிகர்கள் கடைகளை சிங்கிள் விண்டோ மூலமாக அகற்றக் கூடிய சூழ்நிலை உள்ளது.

    மதுரை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41-வது வணிகர் தினத்தையொட்டி, வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரை விமான நிலையம் அருகேயுள்ள வலையங்குளம் பகுதியில் மே மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான கால் கோள் விழா இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்றார். நிகழ்ச்சியில் மதுரை மண்டல மாவட்ட தலைவர் செல்லமுத்துத்து, மாநில தலைமைச் செயலாளர் பேராசியர் ராஜ்குமார், மாநில கூடுதல் செயலாளர் பெரிஸ் மகேந்திரவேல், கூடுதல் மாநில செயலாளர் வி.பி.மணி உள்பட பல முன்னிலை வகித்தனர். இதில் மதுரை மாவட்டச் செயலாளர் அழகேசன், பொருளாளர் லட்சுமி காந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மே மாதம் 5-ந்தேதி 41-வது வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் விடுதலை முழக்க மாநாட்டிற்கு லட்சக்கணக்கான வணிகர்கள் குடும்பத்துடன் பங்கேற்பார்கள். இந்த மாநாட்டுக்கு பின்பு அமையக்கூடிய புதிய மத்திய அரசு எந்த அரசாக இருந்தாலும் வணிகர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். மேலும் இந்த மாநாட்டில் முக்கியமான ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

    சாமானிய வணிகர்கள் கடைகளை சிங்கிள் விண்டோ மூலமாக அகற்றக் கூடிய சூழ்நிலை உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள், மும்பை, கேரளாவை சேர்ந்த முதலாளிகள் தமிழகத்தின் வணிகத்தை ஒட்டு மொத்தமாக அப்புறப்படுத்த முயற்சிக்கின்றனர். மேலும் வணிகர் மாநாட்டிற்கு பிறகு தமிழ்நாடு வணிகர்களின் பாதுகாக்கும் முயற்சியாக வணிகர் பாதுகாப்பு சட்டம் என்னும் சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க இந்த அமைப்பு முயற்சி எடுக்கும்.

    வணிகர் சங்க மாநாட்டில் அமைச்சர்கள், வணிகர் சங்க பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொள்கிறார்கள். மாநாட்டிற்கு வருகை தருபவர்களுக்கு வேண்டிய பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வகையான அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்து தரப்பட உள்ளது. அதற்காக தனிக்குழுவும் அமைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் இந்த கால்கோள் விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டு மாநாடு சிறப்பு பெற தங்களுடைய ஆலோசனைகளை வழங்கினர். நிகழ்ச்சி நிறைவில் மாநில பொருளாளர் சதக்கத்துல்லா நன்றி கூறினார்.

    ×