என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வங்கி பெண் ஊழியர் தற்கொலை
நீங்கள் தேடியது "வங்கி பெண் ஊழியர் தற்கொலை"
சத்துவாச்சாரி தனியார் விடுதியில் தங்கியிருந்த வங்கி பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம்பட்டியை சேர்ந்தவர் அரசப்பன் மகள் தமிழரசி (வயது 30). ஊசூரில் உள்ள வங்கியில் கிளர்க் வேலை செய்து வந்தார். வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவரது ஊரை சேர்ந்த மகேஷ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகேஷ்குமார் சென்னை ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
திருமணத்திற்கு பிறகும் தமிழரசி விடுதியில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் விடுதியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சத்துவாச்சாரி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X