search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லயோலா கல்லூரி"

    • 9-ந் தேதி வரை 6 நாட்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.
    • நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டி நடக்கிறது.

    சென்னை:

    லயோலா கல்லூரி சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் மர்பி நினைவு கோப்பைக்கான தென் இந்திய கல்லூரிகள் இடையேயான கால்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான 23-வது கல்லூரிகள் கால்பந்து போட்டி நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 9-ந் தேதி வரை 6 நாட்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் லயோலா, எம்.சி.சி, செயிண்ட் ஜோசப் ( திருச்சி), அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி , ஜாமியா நத்விய்யா கல்லூரி ( கேரளா) உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டி நடக்கிறது.

    சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். 2-வது , 3-வது, 4-வது இடங்களுக்கு முறையே ரூ.7 ஆயிரம், ரூ. 5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். இது தவிர சிறந்த வீரர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படும்.

    மேற்கண்ட தகவலை லயோலா கல்லூரி முதல்வர் ஏ. லூயிஸ் ஆரோக்யராஜ், விைளயாட்டு குழு தலைவர் எம்.எஸ்.ஜோசப் அந்தோணி, உடற் கல்வி இயக்குனர் எஸ். விஜயகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.

    ×