என் மலர்
நீங்கள் தேடியது "Chennai Loyola College"
- லயோலா கல்லூரி கருத்தரங்கில் நேச்சுரல்லி நிறுவனர் சம்யுக்தா ஆதித்தன் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார்.
- முடிவுகளை பற்றி கவலைப்படாதீர்கள். அதன்மூலம் நமக்கு கிடைக்கும் அனுபவம் தான் முக்கியம்.
இன்று சென்னை லயோலா கல்லூரியில் பெண்கள் தொழில்முனைவோர் நலச்சங்கம் மற்றும் பெண்கள் சேவா சங்கம் சார்பாக பெண்களின் முன்னேற்றம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் பெண்கள் தொழில்முனைவோர் நலச்சங்கம் மற்றும் பெண்கள் சேவா சங்கத்தின் நிறுவனர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் அறிமுக உரை ஆற்றினார்.
இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஆர்பிஐ மண்டல இயக்குநர் உமா சங்கர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.
மெகா தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் ஜெயந்தி தங்கபாலு மற்றும் லயோலா கல்லூரியின் முதல்வர் லூயிஸ் ஆரோக்கியராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் சுபாஷ் மற்றும் அன்னை வேளாங்கண்ணி கல்வி குழும நிறுவனங்களின் இணை செயலாளர் ஸ்ரீதேவி தேவ் ஆனந்த் மற்றும் நேச்சுரல்லி நிறுவனர் சம்யுக்தா ஆதித்தன் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் பேசிய சம்யுக்தா ஆதித்தன், "இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. வெற்றியை குறித்து நான் பேசுகிறேன். வெற்றி என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. நம்மை பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பது தான் முக்கியம். நாம் என்ன சொல்கிறோம், என்ன நினைக்கிறோம், என்ன செய்கிறோம் என்பது தான் நம்மை தீர்மானிக்கிறது.
நம்முடைய வேலைகள் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நாம் கவலைப்பட தேவையில்லை. நாம் நம்மை நம்பி வேலை செய்தால் சாதிக்கலாம். நமக்கு நடக்க வேண்டியது கண்டிப்பாக கடக்கும். முடிவுகளை பற்றி கவலைப்படாதீர்கள். அதன்மூலம் நமக்கு கிடைக்கும் அனுபவம் தான் முக்கியம்.
நம்மை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யோசிப்பதை நிறுத்தி விடுங்கள். இன்று நம்மால் எத்தனை பேர் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்ற கேள்வியை கேட்டு பாருங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சியை நமக்கு தரும். என்னுடைய பார்வையில் வெற்றி என்பதற்கான விளக்கம் இதுதான். இங்குள்ள அனைவரும் கண்டிப்பாக ஒருநாள் இந்த வெற்றியை அடைவீர்கள் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
தேனி எல்.எஸ்.எல்.மில் கூடைப்பந்து கழகம் சார்பில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. இந்த போட்டிகளில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்றன. இதில் 4 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்று அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி நடந்தது. இதில் சென்னை லயோலா கல்லூரி அணியும், சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழக அணியும் வெற்றி பெற்றி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
பரபரப்பான இறுதிப் போட்டி மாலையில் நடந்தது. ஆரம்பம் முதலே லயோலா கல்லூரி அணி ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. இறுதியில் 73:44 என்ற புள்ளி கணக்கில் இந்துஸ்தான் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி லயோலா கல்லூரி அணி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. இந்துஸ்தான் பல்கலைக்கழக அணி 2-வது இடம் பிடித்தது. இந்த போட்டித் தொடரில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 3-வது இடமும், சென்னை டி.ஜி. வைஸ்னவா கல்லூரி அணி 4-வது இடமும் பெற்றது.
இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை எல்.எஸ்.எல்.மில் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், இணை நிர்வாக இயக்குனர் பிரபாகரன் மற்றும் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நிர்வாகிகள், கூடைப்பந்து கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.






