search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ வீரர் மனைவி"

    • ராணுவ வீரர் மனைவியை மிரட்டி நகை பறித்த கொள்ளையர்களுக்கு போலீசார் தேடி வருகின்றனர்.
    • 5 பவுன் தங்கச் சங்கிலி உள்பட மொத்தம் 29 பவுன் நகைகளை பறித்து க்கொண்டு தப்பி விட்டனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி, குராயூரை சேர்ந்தவர் அய்யனார் (வயது32), ராணுவ வீரர். இவரது மனைவி கவுசல்யா(28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    அய்யனார் காஷ்மீர் ராணுவ முகாமில் தங்கி பணியாற்றி வருகிறார். கவுசல்யா தனது குழந்தை களுடன் குராயூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அருகில் உள்ள வீட்டில் மாமியார், மாமனார் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கதவை தட்டி கவுசல்யாவை அழைத்தனர். அவர் வந்து கேட்டபோது உங்கள் மாமனாருக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என்று கூறினர். அதை உண்மை என்று நம்பிய கவுசல்யா கதவை திறந்தார்.

    உடனே வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கவுசல்யா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி உள்பட மொத்தம் 29 பவுன் நகைகளை பறித்து க்கொண்டு தப்பி விட்டனர்.

    இது குறித்து கவுசல்யா கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுசல்யாவிடம் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். அருகில் உள்ள கண்காணிப்பு காமி ராக்களில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.

    இந்த கொள்ளையில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்க லாம் என்று போலீசார் கருதுகின்றனர். அவர்கள் கவுசல்யா தனியாக இருப்பதை நோட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர். இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×