search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணி"

    தன்மீது பொய் புகார் சொன்ன ராணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சண்முகராஜன் நடிகர் சங்கத்தில் புகார் அளித்ததன் பெயரில் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. #Rani #ShanmugaRajan
    ‘வில்லுப்பாட்டுக்காரன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராணி. ஜெமினி படத்தில் ‘ஓ போடு ஓ போடு,’ காதல் கோட்டை படத்தில் இடம்பெற்ற ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ பாடல்களில் நடனம் ஆடினார். தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி தொடரில் சண்முகராஜனின் மனைவியாக ராணி நடித்தார்.

    சண்முகராஜன் விருமாண்டி, சிவாஜி, சண்டக்கோழி உள்பட பல படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார். செங்குன்றத்தில் நடந்த நந்தினி தொடர் படப்பிடிப்பில் சண்முகராஜன் தன்னை தாக்கியதாக ராணி கடந்த அக்டோபர் மாதம் போலீசில் புகார் அளித்தார். பாலியல் தொல்லை கொடுத்தாகவும் கூறினார்.

    பின்னர் சண்முகராஜன் வருத்தம் தெரிவித்ததால் புகாரை வாபஸ் பெற்றுவிட்டதாகவும் தெரிவித்தார். ராணிக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்றும் தன்மீது பொய் புகார் சொன்ன அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சண்முகராஜன் நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். இதற்கு விளக்கம் கேட்டு ராணிக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. 



    இந்த நிலையில் சண்முகராஜனுக்கு நடிகர் சங்கம் தற்போது அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ‘‘நீங்கள் அளித்த கடிதத்துக்கு விளக்கம் அளிக்கும்படி ராணிக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு இதுவரை அவர் விளக்கம் அளிக்கவில்லை. நடிகர் சங்க செயற்குழு நேரில் ஆஜராகியும் நீங்கள் விளக்கம் அளித்தீர்கள். உங்கள் மீது பாலியல் புகார் காழ்ப்புணர்ச்சியால் கொடுக்கப்பட்டது என்பதை தாங்கள் அளித்த விளக்கம் மூலம் தெரிந்து கொண்டோம். 

    இனிவரும் காலத்தில் நடிகை ராணி திரைப்படங்களிலோ, அல்லது தொலைக்காட்சி தொடரிலோ நடிக்க வரும்போது தங்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டால் மட்டுமே அவர் தொடர்ந்து திரைப்பட துறையில் நடிக்க அனுமதி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.’’

    இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சண்முகராஜன் மீது புகார் கொடுத்த ராணி, அந்த புகாரை வாபஸ் பெற்றிருக்கிறார். #Rani #Shanmugarajan
    ஜெமினி, வில்லுப்பாட்டு காரன், நாட்டாமை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ராணி. தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நந்தினி” தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரபல வில்லன் நடிகர் சண்முகராஜன் நடிக்கிறார்.

    சில நாட்களுக்கு முன்பு ராணி தனது கணவராக நடிக்கும் சண்முகராஜனை கன்னத்தில் அடிப்பது போல காட்சி எடுத்தனர். அப்போது அவரை ராணி உண்மையில் அடித்ததாக தெரிகிறது. இதனால் சண்முகராஜனுக்கும், ராணிக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டது. எனினும் அவர்களது படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்தது.

    இன்று காலை செங்குன்றம் ஜி.என்.டி. சாலையில் உள்ள ஜவுளிக்கடையில் துணி எடுப்பது போன்ற காட்சிக்காக ராணியும், சண்முகராஜனும் வந்தனர். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதனைக் கண்ட அங்கு இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அப்போது சண்முகராஜன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுப்பதாக ராணி கூறி கதறி அழுதார். பின்னர் அவர் செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து, தான் கொடுத்த புகாரை ராணி வாபஸ் பெற்றார். நடிகர் சண்முகராஜன் மன்னிப்பு கேட்டதால் அவர் மீதான பாலியல் புகாரை திரும்பப் பெற்றேன் என்று நடிகை ராணி கூறியிருக்கிறார். நடிகை ராணி என் மீது கூறிய பாலியல் புகார் உண்மையல்ல; எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு களைந்து சமரசம் ஏற்பட்டு விட்டது என்று நடிகர் சண்முகராஜன் கூறினார்.
    ×